Friday, September 30, 2011

108. எது புதுமை

சிலகணம் சேர்ந்து
சிலகணம் பிரிந்து
மறுமணம் புரிந்து
மறுபடி பிரிந்து
வாழ்வதென்பது
வழக்கம் ஆனது
"புதுமை" கூறும்
சிலரது வாழ்வு

வாழ்வின் அர்த்தம்
அறியா வரையில்
வாழ்வின் நெறிகள்
புரியா வரையில்
எடுத்தேன் கவிழ்த்தேன்
என்பது போன்று
வாழ்வதல்ல
"புதுமை" என்பது!

வாழ்ந்து முடித்த
முன்னோர் வழியில்
வள்ளுவன் காட்டிய
வாழ்க்கை நெறியில்
பெற்றோர் வாழ்ந்த
புரிதலின் நிலையில்
தொடர்ந்து செல்வதும்
"புதுமை" ஆகும்!
25-09-2011. குருகுலம்.

109 இரு முதியவர்

வடக்கில் ஓர் முதியவர்
விரதமிருந்தார்
ஊழலை எண்ணியே வருந்தி
தெற்கில் ஓர் முதியவர்
உள்ளே குமுறுரார்
ஊழலை செய்தே விரும்பி
"வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது"
என்று இதைத்தான்
அன்றே சொன்னாரோ?
29-08-2011. குருகுலம்

Thursday, September 29, 2011

அந்தமானுக்குச் சென்றிருந்தபோது, மாயாபந்தரிலிருந்து, கதம்தலா வழியாக போர்ட் ப்ளேயருக்கு வந்த போது நிர்வாணமாய் வாழும் ஜெரவா இனமக்களை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களை நாகரீக மக்களாக்குகிறோம் என்றபெயரில் செய்யப்படும் செயல்கள் சரியல்ல என்பது என்கருத்து. அதைக்குறித்து சென்னைக்குச் மீண்டும் கப்பலில் திரும்பிகொண்டிருந்தபோது எழுதிய பாடல்:

107. மெய் ஞானிகள்

"நிர்வாணம்"(முக்தி) அவர்க்குப் புதிதல்ல
நிர்வாணமாய் அவர் வாழ்வதினால்
"மெய்ஞானம்" அவர்க்குப் புதிரல்ல
"அஞ்ஞானம்" என்னவென்று அறியாததால்
வானமே கூறையாய் ஆனபின்னே
வாழ்வதற்கு அவர்க்கு வீடெதற்க்கு
காற்றே ஆடையாய் ஆனபின்னே
மாற்றுடை தேடும் மனம் எதற்கு

இயற்கையோடு இணைந்து வாழும்
"ஜெரவா" என்னும் மெய்ஞானிகள்
ஐயகோ ஆவார்கள் "அஞ்ஞானிகள்"
நம்முடன் தொடர்பு கொள்ளும்போது!

"நாகரீகம் தருகிறோம்" என்றெபெயரில்
நாம் செய்வதும் வீண் அஞ்ஞானமே
நம்மிடை வாழ அவர் வந்துவிட்டால்
நலன் ஏதும் பெறார் இதுதிண்ணமே!

இயற்கையுடன் வாழ அவரைவிடுங்கள்
இதுவே அவர்க்கு செய்யும் நன்மையாகும்
அவர்கேட்கவில்லை நம்வாழ்வை
ஆகவே செய்யாதீர் இவ்வநியாயம்
116. நல்ல பங்கு

நல்ல பங்கை மட்டும் நாடிட வேண்டும்
நானிலத்தில் எனக்கு வேறென்ன வேண்டும்

தீய செயல்களை தூரவே நீக்கி
துன்மார்க்க வழியை அறவே போக்கி
மாறுபடும் மனதை நேர்வழியாக்கி
மனதின் இருளை என்றுமே நீக்கி--நல்ல....

கோபம் பொறாமை கோள்சொல்லும் புத்தி
கொடும் வார்த்தை பேசும் கடின இதயம்
சொல்லவும் கூசும் செயல்கள் யாவும்
செய்யாமல் இனியென்றும் உன்பாதம் நாடி--நல்ல....

01-07-2004. மத்திகிரி (ஓசூர்)

117. உறவாடவேண்டும்

உள்ளான உணர்வினிலே உன்னோடு உறவாடி
ஒவ்வொருநாளும் நான் வாழ வேண்டும்
உறவாட என்னிடம் நீ வரும்போது நான்
தடை ஒன்றும் போடாமல் காக்க வேண்டும்
அன்னையாய் என்னை நீத் தழுவிடும்போது
அழுகின்ற குழவியாய் நான் மாற வேண்டும்
தந்தையாய் என்னை நீ தட்டிக் கொடுத்திட
தாள் சேர்ந்து பணிவாக கற்க வேண்டும்
தனயனாய் எனக்கு நீ வழிகாட்டும் போது
தயங்காமல் உன் பின் செல்ல வேண்டும்
தோழனாய் என்னை நீ தோள்சேர்க்கும் போதிலே
தோள்மீது தலைசாய்ந்து கண்மூட வேண்டும்
காதலாய் என்னிடம் கனிவுடன் வரும்போது
கசிந்துருகி உன்மார்பில் தவழவேண்டும்
எத்தகைய உறவாக என்னிடம் வந்தாலும்
உள்ளான உணர்வோடு நான் வாழ்வேண்டும்!
03-07-2004. மத்திகிரி (ஓசூர்).

118. அருள்வாயே

இத்தனை அன்பும் இருந்து விட்டால் இறைவா
இத்தகைய வாழ்வும் வாழ்ந்திடு வேனோ?
எத்தனை குறைவாக என் அன்பு உள்ளது
என்பதைக் கூறவும் என்னாலே ஆகுமோ?

கண்ணீரால் உன்பாதம் நீராட்ட முடியாது
சிரம் கொண்டு உன்னடி சேவிக்க இயலாது
மனதுள்ளும் உன்னை கணநேரம் நினைக்காது
மனம்போன போக்கில் வாழ்கிறேன் இப்போது

கொஞ்சமோ மன்னிப்பு கொடுத்தாய் நீ எனக்கு
கூறவும் முடியுமோ என்பாவத்தின் கணக்கு?
எத்தனை மன்னித்தும் உன் மீது எனக்கு
உள்ளான அன்பில்லை என்பதே வழக்கு

மன்னிப்பின் தேவையை இன்னும் உணராமல்
மதிகெட்டு வாழ்கிறேன் மன்னவா அறியாயோ?
விடுதலை அன்றி வேறென்ன வேண்டுவேன்?
கரம் ஏந்தி நிற்கிறேன் கனிவாக அருள்வாயே!
06-07-2004. மத்திகிரி (ஓசூர்)

119. பணிகிறேன்

குருவாய் வந்து அருவாய் நிற்கும்
குமரா உன்னைத் தொழுகின்றேன்
மதியால் மட்டும் அறியா வண்ணம்
உறவால் உன்னைப் பணிகின்றேன்
கதியே என்று அடைந்தோர்க் கெல்லாம்
புகலிடமானாய்ப் புகழ்கின்றேன்
மன இருளை நீக்கி ஞானம் தந்தாய்
என்றும் உன்னைப் பணிகின்றேன்
18-08-2004. மத்திகிரி. (ஓசூர்)

120. அடையாளம் காணவேண்டும்

சரணம்

அடையாளம் நான் காண வேண்டும் ஐயனே
அனுதினம் என்னுடன் உறவாட வரும்போது--அடையாளம்....

பல்லவி

கனல் கொண்டு என்னுள்ளம் எரிய-நீ
கருணையால் ஒரு சொல்கொண்டு போதிக்க--அடையாளம்....

வழிப்போக்கன் போலவே வாழ்வில் நான்
வழி தெரியாது தடுமாறி நடக்கின்ற போதும்
கரம் கொண்டு என்னை நீ பற்ற, உன்
உடன் சென்று நானும் உலகையே வெல்ல--அடையாளம்....

தங்கவோர் இடமின்றி நீயும், உலகிலே
திரிந்தேதான் சேவையும் செய்தாய்
இடம் ஒன்று என்னிடம் உண்டு, நீ
இளைப்பாற என்னுள்ளம் ஒன்றேதான் என்று--அடையாளம்....

வர வேண்டும் அப்பனே நீயும், என்
மனம் கோயிலாய்க் கொண்டுமே வாழ
விடமாட்டேன் இனிஎன்றும் உன்னை, நீ
விரும்பியே வேறிடம் செல்லவே விழைந்தாலும்--அடையாளம்....
2004.

121. இல்லை இல்லையே

நாடவில்லை நாதனே நான் நின்னடி
நாடி என்னை நீ தேடி வந்ததால்
மனம் கூடவில்லை தொண்டர்குழாமொடு
குறைவும் பல என்னிடம் உள்ளதால்
ஓயவில்லை போராட்டம் என்னிலே
உள்ளபடி நான் உன்னை அறியாததால்
தேறவில்லை வாழ்விலே நானும் இன்னும்
தெய்வமே மனதில் உண்மை இல்லாததால்
ஒன்றும் செய்ய இயலவில்லை என்னால்
உன்னாவி தன்னை நான் இழந்ததால்
சொல்ல இயலவில்லை என்நிலை தன்னையே
சொற்களும் என்னுளே வெட்கி நின்றதால்
செல்வதும் வேறெங்கும் இல்லையே இனி
சேவடியன்றி வேறு நான் அறியாததால்
எவ்விதம் நான் இங்கு வாழ்ந்த போதும்
எல்லாமும் நீயும் உள்ளபடி அறிந்ததால்
கூற வரவில்லை மீண்டும் மீண்டுமே
கவலை என்மீது நீயும் கொண்டதால்.
12-09-2000. ஈரோடு

122. தா தா

உனக்குள் வாழும் உரிமையைத் தா
உன்னையே தொழுதிடும் மனதினைத் தா
உலகம் ஆயிரம் சொல்கின்ற போதிலும்
உன்னோடே நடந்திடும் துணிவினைத் தா
என்னையே துறந்திடும் அறிவினைத் தா
எனதென்ற எண்ணம் அழிந்திடத் தா
எல்லாம் உனதென்ற உணர்வினைத் தா
என்னையே அளிக்கும் உணர்வினைத் தா
"தா" வெனக் கெஞ்சியே உன்னிடமே
தாழ்மையாய் நான் வரும் போதினிலே
"வா" வெனக் கொஞ்சியே என்னையுமே
வாரியணைத்திடும் தாயாக நீ வா!
04-06-2000. ஓசூர்

123. தாங்குவாய்

பலவீனம் மீறி தாங்கட்டும்
பரனே உன் கிருபை என்றும்
பயனேதும் காணேன் இனி நானும்
என்பெலன் கொண்டு வாழுமட்டும்

தோல்வியும் வெற்றியும் மாறி மாறி
தொடர்ந்து வாழ்வினில் வந்த போது
பயமும் பெருமையும் வந்து சேர
கலங்கினேன் என்நிலையை எண்ணி

சீராக வாழ்க்கையும் சென்றிடாது
சிந்தையும் ஒருநிலை நின்றிடாது
போராடும் மனதுடனே வாழ்வதாலே
தடுமாற்றம் ஒன்றே நிலையானது

ஆயினும் உன்னடி தேடி வந்தேன்
ஐயனே நீயன்றி வழியும் காணேன்
தடுமாறும் மனதினை நிலை நிறுத்த
தயவுடன் தருவாய் அருளை நீயும்
04-07-2006. மத்திகிரி (ஓசூர்)

124. வென்றிடுவேனே

உலகை வென்றவன் நீயே-அதனால்
உலகை நானும் வென்றிடுவேனே
துன்பமும் துயரமும் தோல்வியும் சேர்ந்து
சோதித்து என்னை ஆழ்த்திய போதும்--உலகை....

அமைதி இழந்து அலைந்திருந்தேனே-அதை
பல இடங்களில் தேடித் திரிந்தேனே
கோபமும், மூர்க்கமும், தாபமும் தாக்கியே
தோல்வியில் என்னை ஆழ்த்திய போதும்--உலகை....

அமைதி என்பது உலகினில் இல்ல-வெறும்
ஆரவாரம் ஒன்றே வாழ்வினில் உண்மை
காயமடைந்தே உன்னிடம் வந்தேன்-உன்
ஆறுதல் ஒன்றிலே அமைதி அடைந்தேன்--உலகை....

29-08-2006. மத்திகிரி (ஓசூர்)

125. காரணம் வேறில்லை

காரணம் இனிஎதுவும் கூறிடமுடியாது
கள்ள மனம் கொண்டு செய்திடும் தீமைக்கெல்லாம்--காரணம்...

அறியாமல் இருந்தாலே தவறேதும் கிடையாது
புரியாமல் செய்தாலும் பிழையேதும் கிடையாது
தெரிந்தேதான் செய்கின்றேன், தேடியே செல்கின்றேன்
தீமை பலசெய்ய துணிந்தேதான் நின்றேன்--காரணம்....

பறிகாரம் பலத்தேடி பலவழி செல்கின்றேன்
சடங்குகள் பலசெய்து பிழையாகத் திரிகின்றேன்
மனதினுள் இருள்கொண்டு மாய்மாலம் புரிகின்றேன்
மனிதர்கள் காணவே வேடமாய் வாழ்கின்றேன்--காரணம்....

ஆயினும் ஓர்வழி உன்னிடம் கண்டேன்
ஐயனே அருள்தேடி உன்னடி வந்தேன்
தள்ளியே என்னை நீ தண்டிக்கலாகாது
நீயன்றி வேறொரு பரிகாரம் கிடையாது--காரணம்....
28-08-2006. மத்திகிரி (ஓசூர்)

126. ஆட்கொண்டாய்

இறை ஞானமாய் இவ்வுலகில் வந்து
என்னை ஆட்கொண்ட வள்ளலே
மன இருள் நீக்கி உன்தன் ஒளிதந்து
என்னைக் காக்கின்ற தெய்வமே
அறிவின் துணைக்கொண்டு உன்னைத்தேடி
அலைந்த காலங்கள் உண்டு
அர்சனை, பூஜை, நோன்பு, நியமமென
ஆயிரம் செயல் செய்ததுண்டு
இவை அத்தனையும் மனித எத்தனமாய்
எப்பயனும் தராத போது
உன்பக்தனைத் தேடி பரிவுகொண்டு நீ
பாங்குடனே உலகில் வந்தாய், நான்
எத்தனம் எதுவும் செய்திடாமலே, இனி
பக்தியால் மட்டும் உன்னைத் தொழ
பரிவுடன் அருள் தினம் தருவாயே!
24-05-2007. மத்திகிரி (ஓசூர்)

127. காப்பாய்


எனது பெலன்கொண்டு நான்
என்றும் வாழ இயலாது
உனது கருணை என்னும் துணை
கொண்டு வாழ முயலும்போது
மனது என்னும் குரங்கினோடு நான்
படும் பல பாடு எண்ணி
கலங்கிடாது காக்கவேண்டும் என்
கடவுளே உன் பெலத்தினால்

25-05-2007. மத்திகிரி (ஓசூர்)

128. இருக்கச்செய்யும்

குழந்தையாய் இருக்கச் செய்யும்-குணத்தில்
குருவே உன்தாள் பணியும் பக்தனாய்
இருக்கச்செய்யும், பரனே பாரில் உள்ளமட்டும்
தொண்டனாய் இருக்கச்செய்யும் சேவை செய்ய
தெய்வமே உன்சாயலாய் வாழச் செய்யும்
தேடுவோர் உனைக்காண ஓர்
கருவியாய் இளங்கச் செய்யும் கடைசி மட்டும்
களங்கமில்லாமல் வாழ ஓர் குழந்தையாய்...

24-08-2007. குருகுலம்

129. தரவேண்டும் நிறைவாய்

வரவேண்டும் வரவேண்டும் இறைவா
அருள் தரவேண்டும் தரவேண்டும் நிறைவாய் நிறைவாய்

அறிந்தேதான் பிழைபல செய்தேன், நான்
அறியாமல் பல பாவம் செய்தேன்
மனதாலும் நினைவாலும் அழிந்தேன், என்
மதிபோன போக்கிலே நடந்தேன், நடந்தேன்--வரவேண்டும்.....

விடைதேடி வாழ்விலே திரிந்தேன், ஆனால்
வழிமட்டும் தெரியாமல் திகைத்தேன்
குணத்தாலும் நலத்தாலும் குறைந்தேன், மனக்
குருடனாய் ஏனோ நான் வாழ்ந்தேன் வாழ்ந்தேன்--வரவேண்டும்.....

முறையிட உன்னிடம் வந்தேன், என்
முரண்பாட்டை சொல்லியே நின்றேன்
இரங்காதோ உன்மனம் இன்னும், ஏன்
வீணிந்தத் தாமதம் இன்னும் இன்னும்--வரவேண்டும்.....

04-12-2007. குருகுலம்

130. விளக்கிட முடியுமோ

கற்பனைக் கதைகளை நம்பவில்லை-நான்
கல்லையும் மண்ணையும் பணிவதில்லை
நிச்சயமாய் உலகில் வந்த உன்னை-என்
நெஞ்சிலே வைத்துமே வாழ்கிறேன்

சித்தமென்று ஒன்று உண்டுனக்கு-அதை
செய்திட என்னையே தெரிந்தாய்
அத்தனே அனைத்தையும் அறிந்த நீ-என்
புத்தியின் செயலிலே ஆளுகின்றாய்

செய்திடும் செயல்களை நானறிவேன்-அவை
செய்திட மட்டுமே துணைபுரிந்தாய்
புத்திக்கெட்டாத உன்பேரருளை-என்
பக்கியின் உணர்விலே காட்டுகின்றாய்

மனம் மொழி செயல்களை அறிந்ததால்
மனிதனாய் உலகில் நீ வந்தாய்-என்
குறைகள் அனைத்தும் உணர்ந்த உனக்கு
கூறிடவேண்டுமோ நான் கணக்கு?

முக்திக்கு ஈசனாய் வந்தவனே-உன்னை
முழுமையாய்ப் புரிந்தவர் எவருமில்லை
சிந்தைக்கு எட்டாமல் நின்ற உன்னை-என்
சொல்கொண்டு மட்டுமோ விளக்கிடுவேன்?

17-12-2007. குருகுலம்

131. தேடுகிறேன்

பாடுகிறேன் உன் பரமபதம் தேடி
பக்தியால் மட்டும் அனுதினம் நாடி
ஓடுகிறேன் பல தேவைகள் தேடி
ஒருவழி காணாமல் திகைக்கிறேன் வாடி
யாரிடம் சொல்வேன் என்தன் நிலையை
இப்புவி வாழ்வே மாபெரும் தொல்லை
ஆயினும் விடவில்லை இதன்மீது ஆசை
என்றுதான் முடியுமோ மனதின் இவோசை
10-11-2007. குருகுலம்

132. எல்லாம் நீ

அம்மை நீ அப்பன் நீ
அருள்காட்டும் தெய்வம் நீ
இம்மை நீ மறுமை நீ
இருள் நீக்கும் ஒளியும் நீ
வாய்மை நீ வழியும் நீ
வாழ்வளிக்கும் ஜீவன் நீ
முதலும் நீ முடிவும் நீ
முக்திக்கு ஈசன் நீ
தொன்மை நீ தொடக்கம் நீ
தொடக்கத்தின் முடிவும் நீ
அருளும் நீ அபயம் நீ
ஆனந்தத்தின் எல்லை நீ
கருணை நீ கடவுள் நீ
காக்கின்ற தெய்வம் நீ
தருமம் நீ தலைவன் நீ
தயைகாட்டும் அன்னை நீ
இறுதி நீ எல்லை நீ
இனி அனைத்தும் நீ எனக்கே
22-07-2008. குருகுலம்

எல்லாவற்றிலும் முதல் பங்கு இறைவனுக்கே என்ற வாதத்தை கேட்டபோது எழதிய பாடல்

133. எல்லாம் உனதே


முழுதும் உனதானால்
முதன்மை எதுவாகும்
கணக்கிட்டுக் கொடுப்பதும்
கருமியின் செயலாகும்

முழுதும் தந்தாய் நீ
முறையிட்டு அளக்காமல்
நான்மட்டும் தரும்போது
விரல்விட்டு எண்ணுவதோ?

காணிக்கை பெயராலே
காசுகளை எண்ணிநான்
ஆலயத்தில் அளித்துவிட்டால்
அத்துடன் முடிந்ததுவோ?

நேரத்தில் முதல்பங்கு
எதுவென்று சொல்லுவது
காலைமாலை மதியமெல்லாம்
கணக்கிடும் முறைதானே!

எண்ணாமல் உன்னையே
எனக்கே அளித்தாய் நீ
எனது என்று இல்லாமல்’
இனியெல்லாமே உனதேதான்!
06-11-2008. குருகுலம்
மாணிக்கவாசகரின் திருவாசகத்தை மஹரியில் (ரீவா. ம.பி) படித்துக் கொண்டிருக்கையில், இடையே நிறுத்தி விட்டு பின்வரும் அந்தாதியின் முதல் பத்து பாடல்களை, 18, 19, 20-03-1990-ல் எழுதினேன். பிறகு பல சமயம் மற்றவற்றை எழுதினேன். என் நோக்கம் மொத்தம் நூறு பாடல்களை எழுதவேண்டும் என்பது. எனவே இந்த "முக்தி அந்தாதி" இன்னும் முற்றுப் பெறவில்லை:

101 முக்தி அந்தாதி

நீயே என்தலைவன் நின்னையல்லால்
நாயேன் யாரை நினைப்பேன் நானிலத்தே
வீணே வாழும் வறியவனை உன்னருளால்
கோனே மீட்பதும் என்நாளோ குணக்குன்றே! 1

குன்றேயணைய குணம்கொண்டாய்
குற்றமொன்றே செய்யும் என்னை நீ
வலியவந்தாட்கொண்டாய் குருசிலன்று
நன்றே கொன்றாய் பாவமதை நான்வாழ 2

வாழ வகையறியா வன்கள்வனை உய்விக்க
தாழ மனுவாய் வந்திறங்கித் தன்னுயிரை
மீள் ஆட்கொண்டாய் மீண்டுமெனை உனதாக
ஆள வரவேண்டும் அனுதின வாழ்வினிலே 3

அனுதின வாழ்வினிலே உன்னருள் வேண்டும்
ஐயனேநீ அதை நிறைவாய்த் தரவேண்டும்
மெய்வழிதனிலே நான் செல்ல வேண்டும்
உன்மறைகூறும் சொல்லின்படி ஒழுக வேண்டும் 4

ஒழுகேன் நான் உன்னருளன்றி உலகினிலே
உய்யேன் நான் உவந்தென்னை மீட்காவிட்டால்
செய்யேன் என்பணிகளைச் செவ்வையாகச்
செய்யும் வகை எனக்கு நீ கூறாவிட்டால் 5

கூறாவிட்டால் அறிவேனோ குணமறியா மனதினிலே
கூறி என்னிடம் நீயேவந்து நாடாவிட்டால்
வாழ்வேனோ நானிலத்தே நாதனே நீஎனைத்
தேடாவிட்டால் கிடைப்பேனோ தெரிந்துனக்குச் சொல்வேனோ 6

சொல்வேனோ உன்பெருமையன்றி என் வாயால்
சொல்லித்தான் முடியுமோ அவையாவும் என்வாழ்வில்
அள்ளித்தான் நீயளித்த நன்மைகள் ஆயிரமே
அவையனைத்தும் எண்ணித்தான் முடியுமோ யாராலும் 7

யாராலும் அறியமுடியா நாதனை, நன்மறையோர்
எவராலும் கூறமுடியுமா வேந்தனை, தூதர்கோடி
போற்ற முடியுமோ முதல்வனை, பக்தர்மட்டும்
காணலாம் காணமுடியா இறைவனை பக்தியாலே 8

பக்தியால் யான்னுனைப் பலகாலும் பற்றியே
உன்புகழ்பாடி, உத்தமா, வித்தகா, எனக்கூறி
உடல்பொருள் ஆவியால் உனைப் போற்றி
நித்தமும் வாழ்ந்திட அருள் கூறாய் 9

கூற முற்பட்டால் என்பாவம் கோடியே
குற்றம் காணமுற்பட்டால் கணக்கில் அடங்குமோ?
குருவே உன்னருளன்றி நாடமுற்பட்டால் நன்னுமோ
நலம் வாழ்வில், தேடிமுற்பட்டு தேடிவந்தவனே! 10

வந்தாய்நீ வறியவற்காய் வான்விட்டே
தந்தாய் உன் இன்னுயிரைத் தான்விட்டே
எந்தாய் இனியென்செய்வேன் என் மனம்விட்டே
செய்வாய்யிச் சேய்க்கருள் எனக் கூறுவதல்லால் 11

கூறுவதல்லால் வேறொன்றறியேன் உன் நாமமன்றி
கூறிச்சேர்வதல்லால் வேறொன்றையறியேன் உன்திருவடியன்றி
சேர்ந்தோதுவதல்லால் வேறொன்றறியேன் உன் புகழன்றி
ஓதிஓய்வதல்லால் வேறொன்றறியேன் உன் அருளன்றி 12

அருளொன்றை வைத்தாய் இருளுக்கு மாறாக
மருண்டுலகில் வாழும் மனிதருக்கே, மன்னவனே!
செருக்கொண்டு இதையறியாமல் பேதையவர்
மனயிருள்கொண்டு உனைவதைத்தார் ஒரு சிலுவையிலே 13

சிலுவையிலே நீசெய்த தியாகமதை, சில
மணிநேரமட்டுமே தியானித்தாலும், பல
பவவசப்பட்டு நிற்கும் மாந்தர்தம், குல
முழுதும் உய்யும்வழி தான் விளங்கும் 14

விளங்கும் உன்னருளும் நீ விளக்கும்போது
கலங்கும் என்மனம் அதை அறியும்போது
மயங்கும் என்வாழ்வு அதை மறுக்கும்போது
தியங்கும் எனக்கதை நீ தருவதும் எப்போது? 15

எப்போ முடியுமோ வாழ்வின் போராட்டம் என்றே
என்நாளும் முறையிடுகின்ற மூடனேநான், இனி
தப்பேதும் செயமாட்டேன் எனக்கூறி தவறிடாமல்
நாள்தோறும் செய்கின்றேன் பல தவறினையே 16

தவறே செய்கின்ற போதும் தள்ளிடாமல்
தாய்போல் தருகின்றாய் உனதன்பைத் தவறாமல்
அறவேநான் திருந்துவதும் என்நாளோ?
ஐயாநான் உன்னருளை என்றும் மறவாமல்? 17

மறவாமல் நானுன்னை துதிக்க வேண்டும்
மன்னவா எனக்கது உவக்க வேண்டும்
பிறழாது நான் இங்கு வாழவேண்டும்
பேதைக்கு இறங்கி நீ அருளவேண்டும் 18

அருளுண்டு நிறைவாய் உலகினிலே ஐயன்
திருப்பாதம் அண்டி வருவோர்க்கே, தினம்
தொழுதுண்டு நிற்போர்க்கு குறையுண்டோ, இனி
துன்பமே போயிற்று இவ்வுலகில் என்றும் 19

என்று காண்பேன் இணையில்லாத் திருவடியை
எல்லோரும் தெழுதேத்தும் ஐயன் மலரடியை
பாதகர்க்காய்த் தழும்பேற்ற பொன்னடியை
பாரின் பாவமெல்லாம் போக்கிய அருளடியை 20

அடிதொழுதிட வந்தேன் ஐயாநான் உன்
அடியான் என்னும் தகுதியினால் இனி
கதியென ஒன்றெனக்கு வேறுண்டோ உன்
கருணையே அன்றி மற்று வழியுண்டோ 21

102. துதியுங்கள்

போற்றித் துதியுங்கள் புகழ்ந்து பாடுங்கள்
புனிதவன் நாமத்தையே உயர்த்திக் கூறுங்கள்
பாவம் போக்கினான் சாபம் நீக்கினான்
பாரில் அவன்போல் தெய்வம் வேறுயாருளார்
அமைதியளித்தான் அன்பையளித்தான்
அவனியிலே அவன்போல் தெய்வம் வேறுயாருள்ளார்
தன்னையளித்தே ஓர் தியாகமே செய்தான்
தரணியிலே அவன்போல்தெய்வம் வேறுயார் உளார்
ஞானமளிப்பான் நலமும் அளிப்பான்
நாதன் அவன்போல் தெய்வம் வேறுயாருள்ளார்
பக்தியளித்தான் முத்தியளித்தான்
பரமன் அவன் புகழினையே போற்றிப்பாடுங்கள்
என்னையும் மீட்டே ஓர் ஏற்றம் அளித்தான்
முக்தேசனைப்போல் தெய்வம் வேறுயாருளார்
மீண்டும் வருவான் உடன் கூட்டிச்செல்லவே
அந்த மீட்பனவன் நாமத்தையே மீண்டும் கூறுங்கள்
02-04-1999. தில்லி.

"தீபு ஜலே" என்ற ஹிந்தி பாடலைத் தழுவி எழுதியது:

103. தீபமேற்று

உள்ளம் என்னும் கோயிலிலே
அன்புஎனும் ஓர் தீபமேற்றி
புகழ்ந்து கூறு அவனை நினைந்துபாடு
கருணாமூர்த்தி அவன் கருணாமூர்த்தி...

காலையும் மாலையும் கனிவுடன் கூறுவாய்
முக்தேசனின் நாமம், முக்தேசனின் நாமம்
புகழ்கூறு மனமே, அவன் பெயர்கூறு மனமே!

தீபமே ஏற்றியே, நாமமே போற்றியே
வழிபடுவோம் உலகில் வாழும்போது
வாழ்வதே அவனருளால்,
நாம் வாழ்வதே அவன் அருளால்

உலகின் ஜோதியாம், உண்மை வழியுமாம்
உயர்த்திடுவோம் அவனை வாழ்த்திடுவோம்
வழிகாட்டுவான் வாழ்வதற்கே அவன்
வழிகாட்டுவான் வாழ்வதற்கே....

03-04-1999. ரோதக் (ஹரியானா)

104. எது வேண்டும்

அருள் வேண்டும் அதுவன்றி உலகினிலே
அமைதியாய் வாழ ஒரு வழிவேண்டும்
தொழவேண்டும் தொண்டர் குழாமொடு
தெய்வமே நின்பாதமதில் பக்தியோடு
மதிவேண்டும் மாயையான இவ்வாழ்வினிலே
மனம்போன போக்கில் போகாமல் இருக்க
குணம் வேண்டும் குற்றம் ஒன்றும்செய்யாது
கூடவே நின்துணைவேண்டும், தனித்துவாழத்
துணிவிலாகோழை எனக்கு வேறெதுவேண்டும்?
வேண்டியபடியே நீ தரவேண்டும் என
எண்ணாமல், நின் சித்தம் ஒன்றே செயவேண்டும்
எனக்கூறிச் சேவடி தனைச் சேர்வதல்லால்
09-08-1999. ராணிகேத் (உத்ராஞ்சல்)

105. எல்லாம் உனக்காக

எனது என ஒன்றும் இல்லை இனி
எல்லாம் உனக்காக ஆனபின்னே!
பின் ஏன் வந்தது வீண் சிந்தையும்தான்
என்மனம் போல ஓர் வாழ்க்கை வாழ?
என்தேகம், திறமை, காலமெல்லாம்
நீயளித்த பிச்சை என உணர்ந்தபின்னும்
என்சொந்தம் அவையெல்லாம் என் எண்ணியே!
என்னையே ஏமாற்றும் தன்மை தன்னை
நீக்கிட மீண்டும் உன்கிருபை தந்து
எல்லாம் உனதே என உணர்ந்து மீண்டும்
உனக்காக வாழ அருள் கூறுவாய்.
12-08-1999. ராணிகேத் (உத்ராஞ்சல்)

106. நன்நிலம்

விளை நிலமாக்கிடு என்னை
உன் வார்த்தை வந்தபோது
அதை வீணாக்கிடும் கரம்பாக
நான் இனி மாறிடாது--விளை....

பாதையில் வீழ்ந்திட்ட வித்தோ
பறவை கொத்திச் சென்றதால்
பயனற்றுப் போனதே வீணாக
அதுபோல் நானும் மாறிடாது--விளை...
பாறையில் விழந்த விதையும்
வேர்விட்டுச் செல்ல முடியாமல்
விரைவில் கருகியதே வீணே
அதுபோல் நானும் மாறிடாது--விளை...

புதரிடை வீழ்ந்த வித்தும்
காலத்தில் கனிதரும் முன்னே
செயலற்றுப் போனது வீணில்
அதுபோல் நானும் மாறிடாது--விளை...

என்மனம் என்ன நிலமோ?
எனக்கே தெரியாது அதனால்!
விதைக்க புறப்படும்முன் நீயே
விபரம் அறிந்து விதைப்பாயே.--விளை....
12-01-1998. சிகந்திராபாத்.

107. செய்நன்றி மறவாமல்

என் நன்றி கொன்றாலும்
என்வாழ்வில் நானென்றும்
செய்நன்றி மறவாமலே
நீசெய்த உதவிக்கு நான்
கைமாறு என ஒன்று
செய்ய முடியாததால்
நாள்தோறும் இவ்வாழ்வில்
நன்றி அதை மறவாமல்
நாடி உன்னடி தேடிவந்து
உன்னருள் போதுமென
ஓய்வாய் அமர்ந்து உன்
கருணையினை சிந்தித்து
எஞ்சிய காலத்தை தஞ்சமென
உன்னடி தனைச் சேர்ந்து
வாழ நாடுகின்ற எனக்கு
வஞ்சனை செய்யாமல் நீயும்
வாரி வழங்கிடு அருள்
கெஞ்சுகின்ற உன் அடியானுக்கு.
08-10-1998. கந்தைலா (ரீவா, ம.பி)

108. திசைக்காட்டு

எது நலமென எனக்குத் தெரியாது
என்வாழ்வின் திசையும் புரியாது
தடுமாறும் ஏழைக்கு சற்றுத் தெளிவாக்கித்
திசைக்காட்டும் தெய்வமே தேடினேன் உன்னடி

புத்தாயிரம் ஆண்டு புதிதாய் பிறந்ததென்று
புரியாத கணக்கிட்டு புவியின் மாந்தரும்
போற்றி வரவேற்ற இப்புதிய நூற்றாண்டில்
போதும் எனக்கென்றும் உன்பொற்பாதம்!

அடுத்தடுத்த நாட்களும் அதிவேகமாகச் செல்ல
வாரம் மாதமாகி வருடமும் விரைந்து செல்ல
முடிவறியா வாழ்க்கைக்கு ஒர்முடிவை நீகாட்ட
தேடி அடிவந்தேன் திசைக்காட்டு நானுய்ய!
01-01-2000. ஈரோடு.

109. மீட்டிடுவாய்

மரித்தவனை நீ எழுப்பிடுவாய்
மனம் முறிந்தவனை தேற்றிடுவாய்
இழந்தேன் எல்லாம் என்பவனுக்கும்
இரட்டிப்பாய் திரும்ப அளித்திடுவாய்

வேண்டுதல் யாவும் கேட்டிடுவாய்
வேண்டா வழியினை நீகிடுவாய்
நல்லவன் நான் இல்லை எனினும்
நாடியே வந்து நீ மன்னிப்பாய்

அருளினை அள்ளி அளித்திடுவாய்
ஆதரவளித்தே காத்திடுவாய்
அருகதை இல்லை என்னிடம் எனினும்
அதையும் தாண்டி வரமளிப்பாய்

எல்லாம் உனது செயலன்றோ!
எதுவும் என்னிடம் இல்லையன்றோ!
சரண் அடைந்தேன் திருவடியில்
தாயே உன் சேய் நானன்றோ

அன்னையும் தந்தையும் ஆனவனே
ஆதியும் அந்தமும் நீதானே
பக்தியின் வலையில் சிக்குண்டு
பக்தனுக்கென்றே வாழ்பவனே!

பாவம் என்ற படுகுழியில்
பலமுறை தவறி வீழ்ந்தபோதும்
பரிவான உன் கரம் நீட்டி
பக்தனை என்றும் மீட்டிடுவாய்.
18-08-2001

110. வழிகாட்டு

புறக்கவில்லை உன்னை புலையனாம் நான்
புலம்புகின்றேன் என்னுள் பெலனின்றுதான்
தள்ளிடுவாயோ என்னை தயைஇல்லையோ?
தவிக்கின்றேன் என்னுடன் போராடியேதான்

அரக்க குணம் பல ஆயிரம் ஓங்கி
அழிக்கின்றதே என்மன உணர்வை
அவைகளை அகற்றவும் இயலவில்லை
ஆதரவுதர நீயேன் இன்னும் வரவில்லை?

முடியவில்லை பலமுறை முயன்றபோதும்
மூர்க்க மனதினை அடக்க நானும்
முடிவே இல்லையோ இதற்குத் தானும்
ஓர் முடிவுசொல் எனக்கு இன்றே நீயும்

பழகிவிட்டதால் பாவம் கூட
பயம் இல்லை எனக்கு அவைகளிடம்
பாவி நான் என்செய்வேன் பதறுகிறேன்
"புறக்காதே" என்றுதான் கதறுகின்றேன்

கதறலும் உன்காதில் விழ வில்லையோ
கல்லாகிப்போனதோ உன்மனதுமே
அழைக்கின்றேன் ஆயிரம் வார்த்தை சொல்லி
அதில் ஒன்றுகூட உன்காதில் விழவில்லையோ?

நான் தவர நீ அதை அனுமதித்தால்
நானிலத்தோரும் உன்னை என்ன சொல்லுவார்?
"பக்தனைக் காக்கவே சித்தமில்லா-இந்த
பகவானும் யாரவன்" என்று கேட்பார்!

என்னைக் காக்கவே இல்லாவிட்டாலும்
இறைவா உன்பெயர் தன்னைக் காக்க
விரைந்தே நீ உடன் செயல்படு
இல்லையேல் என்னை நீ கொன்றுபோடு

ஆத்திரத்தில் ஆயிரம் சொல்லிடுவேன்
அவைகளை மட்டுமே நீ கணக்கிடாது
மாறாத உன் கருணையினால்-மனம்
மருகும் பாவிக்கு ஓர் வழிகாட்டு!
24-09-2000. ராணிகேத் (உத்ராஞ்சல்)

111. அனுதினம் வாழ அருள் புரி

ஒவ்வொரு நாளாய் உலகத்தில் வாழ
உதவிசெய்வாய் இறைவா நீயும்
உலகத்தின் ஆசைகள் உள்ளத்தை நெருக்காமல்
காத்திடுவாய் நீயே என்தலைவா!

நடுக்கத்துடனே நாளும் கழிந்திடும், நான்
நெருக்கத்தின் மத்தியில் வாழ்ந்திடும்போது
வீண் கலக்கத்துடன் காலமும் கழிந்திடும்
கருணை நீ என்மீது வைக்காதபோது!

ஒவ்வொரு நாளும் உலகினில் வாழ
ஓயாமல் போராடும் பக்தனின் மீது
இத்தனைக் கோபமும் இன்னமும் ஏனோ?
வீண் இத்தாமதமும் ஞாயம் தானோ?

எதிர்காலம் என்பது வீணான கனவு
கடந்தகாலமோ போராடியே கழிந்தது
நிகழ்காலம் மட்டுமே உண்மையானது
அதுவும் போராட்டமானால் என்செய்வது?

நன்றும் தீதும் நான் நன்கறியேன்
நடிக்கின்றேன் மேடையில் உன்விருப்பம்போல
தீர்மானம் செய்வதோ உன்தனின் பொறுப்பு
எனக்கில்லை ஒன்றும் இதில் விருப்பு-வெறுப்பு!
26-06-2001. ராணிகேத் (உத்ராஞ்சல்)

"துமேஹி மாதா, துமேஹி பிதா" என்ற ஹிந்தி பாடலை தழுவி எழுதியது"

112. தாய் தந்தை நீயே

தாய்தந்தை ஆனாய் தமயனும் ஆனாய்
தரணியில் எனக்கு நண்பனும் ஆனாய்
துணையாக வந்தாய் தூயவன் நீயே
வேறில்லை யாரும் வழிகாட்டத் தானே
கருணைக் கண் திறந்து காத்தருள்வாயே
தாய் தந்தையாகி தாங்கிடுவாயே--தாய் தந்தை.....

மலராத மொட்டாய் வாடினேன் நானே
மலரடி தன்னில் வாழ்கின்ற நானே!
கருணைக் கண் திறந்து காத்தருள்வாயே
தாய் தந்தையாகி தாங்கிடுவாயே--தாய் தந்தை.....

கல்லாத மூடனாய் வாழ்கின்றேன் நானே
கருத்தில்லாப் பேதையாய் மாறினேன் நானே
கருணைக் கண் திறந்து காத்தருள்வாயே
தாய் தந்தையாகி தாங்கிடுவாயே--தாய் தந்தை.....

திருவடி காண துடிக்கின்றேன் நானே
தரிசனம் காணாமல் தியங்கினேன் தானே
கருணைக் கண் திறந்து காத்தருள்வாயே
தாய் தந்தையாகி தாங்கிடுவாயே--தாய் தந்தை.....

இவ்வருள் அன்றி வேறென்ன வேண்டும்?
இவ்வாழ்வில் ஒளி நீ காட்டிட வேண்டும்
கருணைக் கண் திறந்து காத்தருள்வாயே
தாய் தந்தையாகி தாங்கிடுவாயே--தாய் தந்தை.....

23-12-2003. மத்திகிரி (ஓசூர்)

113. சுயசரிதை

உத்தமன் இல்லை நான் உள்ளத்திலே
உள்ளபடி அறிந்தேன் இறைவா நான்
செத்தவன் ஆனேன் சிந்தையிலே-என்
சிறுமதி உணர்ந்தேன் தலைவா நான்
நித்தமும் நான்வாழும் வாழ்வினிலே
நேர்மையோ இல்லை என் எண்ணத்திலே
புத்தித் தடுமாறி பேதலித்தவன்போல்
போகிறேன் என்போக்கில் வாழ்வினிலே
சத்தியம் தன்னை நான் அறிந்தாலும்
சற்றேனும் துணியவில்லை அதை செயல்படுத்த
சுயபெலன் இல்லாத கோழையே நான்
சொல்லிவிட்டேன் இதை உன்னிடம் தான்
இன்னும் என்னதான் கூறுவேன் நான்
எப்படி உரைப்பேன் என் உள்மனதை?
அத்தா அத்தனையும் நீ அறிந்ததினால்
அதிகம் கூறவேண்டாம் வார்த்தையினால்
நித்தம் நீகாட்டும் கருணையினால்
மீண்டும் வாழ்கிறேன் வாழ்க்கையில்தான்!
17-05-2004. மத்திகிரி (ஓசூர்)


114. உன் சித்தம் செய்ய வேண்டும்

உன் சித்தம் ஒன்றே செய்யவேண்டும்-ஸ்வாமி
உலகில் என்சித்தம்போல் ஏதுமே செய்யாமல்
உன் சித்தம் எதுவென்று உண்மையாய் அறிந்து--உன் சித்தம்....

சிந்தை பலவாறு சீர்கெட்டுத் தடுமாறி-ஐயோ
செய்ய நினைப்பதை எண்ணிநான் பாராமல்--உன் சித்தம்....

கண்கொண்ட ஆசைக்கும் கணக்கேதும் உண்டோ?
கண் இல்லாமல் வாழ்வதே உத்தமம் அன்றோ--உன் சித்தம்....

மாமிச இச்சையால் மயங்குதல் தகுமோ
நெய்விட்டுத் தீயை அணைக்கவும் ஆகுமோ--உன் சித்தம்....

என்வாழ்வை எண்ணி என்னென்ன பெருமை
நீசனாய் வாழ்வதே உண்மையான நிலமை--உன் சித்தம்....

மூவாசை என்னும் மலம் வேறெங்கும் இல்லை
முக்திக்குத் தடையும் வேறாரும் இல்லை--உன் சித்தம்....

24-05-2004. மத்திகிரி (ஓசூர்)

115. சாரம்

சாரமற்றுப் போனால் சற்றேனும் உதவுமோ
சற்றெண்ணிப் பாராய் நீ என் மனமே!
மாற்றென்று வாழ்வினில் வேறு வழிஇல்லை
மனம்போன போக்கில் செல்ல இடமில்லை

உப்பில்லா பண்டம் குப்பையில் நிச்சயம்-ஆனால்
உப்பே குப்பையாகும் தன் தன்மை இழக்கையில்
மனிதனாய் வாழ்வதே உண்மையில் நம்நிலை-இதை
மறந்தால் என்னாகும் அந்தோ நம் நிலை!
26-05-2004. மத்திகிரி (ஓசூர்)

Monday, September 26, 2011

106. துறந்த இல்லறம்-சிறந்த துறவறம்

இல்லறம் துறவறம்
இரண்டும் நல்லறம்
ஆயினும் இல்லறம்
அமைய சிறப்புடன்
வேண்டும் துறவறம்
சற்றே அவரிடம்
"நான்" என்ற
ஆணவம் துறந்து
"நமதே" என்ற
எண்ணம் அமைந்து
பிறர்க்கு உழைக்க
தன் "நலம்" பேணி
அனைவரும் வழ்வில்
அனைத்தும் பெற்றிட
மனதில் "துறந்து"
வாழ்வில் உயர்ந்து
ஒன்றாய்க் கூடி
இன்பம் துய்த்து
வாழ்ந்தால் இல்லறம்
என்றும் உயர்ந்திடும்
துறவறம் என்பதும்
துறப்பது அல்ல
துணிவாய் சில
தேவையை மறுத்து
பிறர்க்கு என்றே
வாழ்வைத் தந்து
உலகம் உய்ய
தவமே இருந்து
தன்னுள் தானே
நிறைவைக் கண்டு
தனித்தே வாழ்ந்து
தாழ்வுடன் இருந்து
அமைதி காப்பது
சிறந்த துறவறம்
25-09-2011. குருகுலம்.
87. எல்லாம் அளித்தாய்

உள்ளம் அளித்தாய்
உணர்வும் அளித்தாய்
உன்னருள் தன்னை
உவந்தே அளித்தாய்
எண்ணம் அளித்தாய்
ஏற்றம் அளித்தாய்
ஏழைக்கு இறங்கி
ஞானம் அளித்தாய்
சிந்தை அளித்தாய்
சீலம் அளித்தாய்
சீர்பட வேண்டியே
சித்தம் வைத்தாய்
எல்லாம் அளித்து
ஏழை எனக்கு
உன்னை அளித்தாய்
உவப்பாய் நீயே!
உள்ளம் எண்ணம்
சிந்தை எல்லாம்
உவப்பாய் நானும்
உன்னில் வைக்க
என்றும் வைப்பாய்
என்மீது இறங்கி
ஐயனே உன்
கிருபை தன்னை!
ஈரோடு, 28-08-1996.

88. பேதைக்கிறங்கு

தடுத்து நீ ஆட்கொள்ள
தலைப்படாவிட்டால்
கெடுத்து எனில்நானே
கெட்டொழிவேனே!
எடுத்து இனிக்கூறி
இயம்பிட வேண்டுமோ?
வடுக்கள் சுமந்தெனக்காய்
சிலுவையில் தொங்கியவா?

குற்றம் குறைஒன்றோ
கண்டாய் என்மீது
கோடியே அவையாவும்
எண்ணிட முடியாது
அத்தாநீ அத்தனையும்
அறிந்த பின்னாலும்
பித்தன் எனைநீயே
புறப்பதுவும் முறையாமோ?

குறைகூறி உன்னில்
முறை இடவில்லை
குருவே மறுவழியன்றி
திருவடி வந்தேனே!
என்ன கூறியினி
ஏழை புலம்பிடுவேன்
அண்ணலே ஆட்கொள்வாய்
அன்றுபோல் மீண்டுமெனை

ஞானியும் அல்லநான்
பேதையும் இல்லைஇனி
மனவேழையாய் ஆகிவிட்ட
கோழையே என்றுமினி
பாவிகளைத் தேடியே
பார்வுலகில் வந்தவனே!
கூறிடத் தேவையோஎன்
குற்றங்கள் அத்தனையும்?

முப்பத்தி எட்டாண்டு
முடமாகி இருந்தவனை
பரிவோடு தேடிச்சென்று
பாங்கான சுகமளித்தாய்
அத்தனை கருணைஇங்கு
அருளாவிட்டாலும்
ஓர்வார்த்தை கூறியே
உயிர்பிப்பாய் மீண்டுமெனை

நான்கேட்டு நீவந்து
நாதனே உதவிசெய்தால்
கைகொட்டி எக்களிப்பார்
குவளயத்து மாந்தருமே!
மாந்தர் நிலையுணர்ந்து
மனுவாய் வந்துனக்கு
என்நிலைத் தெரியாதோ?
ஏன்னிந்தத் தாமதமோ?

விட்டுப் பிடிப்பதெல்லாம்
சிறுபிள்ளை விளயாட்டு
இனிவேண்டாம் என்னிடம்
உன் அவ்விளையாட்டு
தட்டுத் தடுமாறி
கரையேறும் முடவனிடம்
இன்னுமா வேடிக்கை
இதுஎன்ன விளையாட்டு?

கூறத் தெரியாமல்
குழந்தைபோல் புலம்புகின்ற
ஏழையென் வார்த்தைகளை
ஏற்கா விட்டாலும்
உன்பக்தன் என்பதனால்
தன்மதிப்பை காத்திடவே
உடனே இறங்கிவிடு
உரிமையால் கேட்கின்றேன்!

தாயைப்போல் என்மீது
நீகொண்ட தயைஎங்கே?
தாசனாம் என்மீது
நீவைத்த பரிவெங்கே?
நேசன்போல் உன்மார்பில்
நான்சாய்ந்த சுகமெங்கே?
நீசனாய்ப் போனதால்
நீயும் கைவிட்டாயோ?

புலம்பித் தவிக்கின்ற
புலையன் மனநிலையை
புரிந்த பின்னாலும்
ஏனிந்த வீண்மொளனம்
ஆயிரம்முறை நான்கூற
அறியாதவன் நீயல்ல
ஆயினும் கூறுகிறேன்
பேதைக்கு நீ இறங்கு!
(ஆயினும் கூறிடுவேன்
பேதைக்கு இறங்கும்வரை)

04-10-1997. மஹரி (ரீவா. ம.பி)

89. போராட்டம்

உன்னோடு போராட வேண்டும்-அது
உவப்பாய் எனக்கிருக்க வேண்டும்
உடலோடு, உளமோடு போராடி ஓய்ந்தபின்
உன்னோடு போராட வேண்டும்!

விட்டேனோ பார் உன்னை என்றும்
விடாமல் பிடிவாதமாய் நின்று
போராடியேனும் நான் பெறவேண்டும்
அந்த புண்ணியம் நீ தரவேண்டும்

வலியவந்தென்னை ஆட்கொண்டு
உன்வழியை காண்பித்து-அதில்
தொடர்ந்து நான் முன்னேற
தெய்வமே உன் அருள்வேண்டும்

உலகின் போராட்டம் எல்லாம்
ஓயாது ஒருநாளும் தன்னில்-ஆனால்
உன்னோடு போராடி பெற்ற அருளினால்
வெல்வேனே அதனை நான் என்னில்
ஜெய்நகர் (மதுபனி. பீஹார்) 17-02-1997.

90. எது வேண்டும்?

ஓயாத உன்னருள் வேண்டும்
உலகம், மாமிசம், பிசாசென்றே
ஒவ்வொருநாளும் தாக்கிடும் போது
ஒருபோதும் மாறாத உன்னதமான--ஓயாத....

பக்தனாய் வாழ்ந்திட வேண்டும்
பலகற்றுத் தடுமாறும் மதியினைச் சாராமல்
தடுத்தாட்கொண்ட உன் தயவினால்
மனதுருகி உன் மாண்பினை எண்ணிடும்--பக்தனாய்....

முக்தியினை நீயருள வேண்டும்
செத்தபின் செல்லும் சொர்கத்தை எண்ணி
நிதமும் வாழ்கின்ற நிலையில்லா வாழ்வு
நரகமாய் மாறிடும் நிலையினை மாற்றிடும்--முக்தியினை....

அத்தா வேறென்ன வேண்டும்?
அடியவன் உன்பக்தன் என்றபெயர்
அடையாமல் வேறெந்த மாண்பும்
அறியாமல் கூட மனதினில் நாடாமல்--அத்தா....
05-04-1997. மன்கவா (ரீவா. ம.பி)

91. உயிர்த்தெழுந்தபின்

உள்ளான அந்த உணர்வில் என்றும்
உனதருளை நான் பெறவே வேண்டும்
உயிர்த்து எழுந்த உன் வல்லமையை
உவந்து நீ எனக்கருள வேண்டும்
உன் மரணத்திற்குள்ளாக மரிக்கும்
மஹிமையை நான் அடைய வேண்டும்
மனிதர்க்காய் துன்பத்தை ஏற்கும் உன்
மர்மத்தை நான் இங்கறிய வேண்டும்
உலகம் இதுவரை அறியாத இந்த
உண்மையை பிறர்க்கு உரைக்க வேண்டும்
உயிர்த்து எழுந்த தெய்வமே அதற்கு
உன்னுடன் நான் ஒன்றாக வேண்டும்
உனக்குள் மரித்து எழுந்த பின்னே
உலகில் நான் வாழ்கின்ற போதும்
உலகம் என்னுள் மரிக்க என்றும்
உனக்காக நான் தினம் வாழ்வேண்டும்
அடைந்து விட்டேன் என்று எண்ணியே!
என்னுள்ளே சும்மா இருந்து விடாமல்
தேறிய வரையிலே நாளும் நான்
தொடர்ந்து உன்பின் ஓடிடவேண்டும்.
மஹரி (ரீவா. ம.பி), 30-03-1997. பிலிப்பியர் 3:7-16.

இவ்வளவு தெய்வங்கள் நம்மிடை இருக்க, நீ ஏன் முக்தேசன் பக்தனாக மாறினாய் என்ற கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகின்றது. அதற்கான ஒரு பதிலாக எழுதிய பாடல்

92. முக்தேசன் பின்னே

நூறாயிரம் தெய்வம் நம்மிடை இருக்க
நீ ஏன் சென்றாய் முக்தேசன் பின்னே?
இக்கேள்வி தன்னை என்னிடம் கேட்காதீர்
ஏனென்றால் பதிலும் அறிவீர் நீர்தானே!
எதனால் புவியில் மனிதனாய் வந்தானோ
அதனால் குருவாகி நின்றானே என்வாழ்வில்
நாடியே நான்செல்லவில்லை அவன்பின்னே
தேடியலைந்தேனே தெய்வத்தைக் காண
தெளிவாய்த் தெரியாமல் அலைந்தேன் என்போக்கில்
அறியாத இருந்த அக்காலத்தை மன்னித்து
அவனாகத் தேடி வந்தானே என்வாழ்வில்
தேடிவந்தவனை "சீ" எனனத் தள்ளுவதோ?
என்தேவை உணர்ந்து அவன்பின் செல்லுவதோ?
தெரிவை என்னிடம் அவன் தந்த பின்னாலே!
தெளிவாய் ஆராய்ந்து சென்றேனே அவன்பின்னே!
17-06-1997. ஈரோடு

93. போராடத் தயங்கமாட்டேன்

நம்மிடை போராட்டம்
நாலுபேர் அறியார்
நான் என்செய்வேன்
நாதனே இனிமேலே
போராடும் மனதுடனே?
எத்தனகாக வாழ்ந்து
தத்தளிக்கும் என்னிடம்
எதுவரை நீபொறுப்பாய்?
சத்தமிட்டே உன்னை
சண்டைக் கழைத்தாலும்
சித்தம் இன்னும்
இறங்கவில்லையோ?
நொண்டியாய் ஆவேனே
என்றே அஞ்சியே!
தள்ளியே நிற்கிறாயோ?
நடமாட முடியாது
முடமாகிப் போகாமல்
நாதனே நீயிறங்கி
நொண்டியாய் ஆக்கிடு
என்று வேண்டியே
சண்டைபோட வந்தேன்
நாலுபேர் அறிய
போராட வேண்டாம்
நல்லபடி கூறுகின்றேன்
ஆயினும் அதுவே
உன்சித்தம் என்றால்
தயங்கிடமாட்டேன்
அதற்கும் நானே!
17-06-1997. ஈரோடு.

94. இயலவில்லை

ஏறெடுத்துப் பார்க்கவும் இயலவில்லை
என் பாவங்களை நினைக்கையிலே
தூரநிற்கவும் துணியவில்லை ஐயா
தொடர்ந்திங்கு பாவத்தில் வாழ்வதாலே!
வேறெங்கு போவேன் வழியேதுமில்லை
மனவேதனைக் கூற மொழியிங்கு இல்லை
"நீதிமான்" என்றே நீ கூறவேண்டாம்
நன்கறிவேன் அதற்கு நான்தகுதி இல்லை
உன்நீதி தன்னை உணராமல் நானும்
ஊர்மெச்ச வேண்டி என்நீதி கூற
பரிசேயன் போலவே பலமுறை நின்று
சுயநீதிமூலம் சோரமே போனேன்
ஆயக்காரன் போல் ஆதங்கம் கொண்டு
ஆலயம் தேடி நான் ஓடவில்லை
நீதேடி வந்து மீட்காவிட்டால்
நான் உய்ய இனி வழியேதுமில்லை
தில்லி. 10-09-1997

95. என்ன செய்வேன்?

வருகின்ற நேரத்தை அறிந்திருந்தால்
விழித்திருப்பேனே உன்னை வரவேற்க
வரும்போது வரட்டும் எனயெண்ணி
சற்றெ அயர்ந்தேன் இளைப்பாற
புத்தியில்லா அப்பெண்களைப் போல்
புலம்பக்கூடாது பின்னே என்று
தீபமுடன் எண்ணைய்யும் கொண்டுவந்தும்
தூங்கும்முன் மறந்தேனே எண்ணை ஊற்ற!
வாக்களித்தபடி நீ வந்தபோது
வாடினேன் நான் கண்விழித்த போது
தூங்கிய காரணத்தால் எண்ணைய்யும் குறைந்தது
தூண்ட மறந்ததால் தீபம் அணைந்தது!
இருட்டிலே விளக்கினைத் தேடும்போது
கைதட்ட எண்ணைய்யும் கீழ்சாய்ந்தது
தீப்பெட்டி தடவிநான் எடுத்த போது
தவறிவிழுந்தது அது எண்ணெய் மீது
தீப்பெட்டி, தீபமுடன் எண்ணைய்யுமே
என்னிடம் இருந்தும் என்ன பயன்?
என்தவறினால் அவற்றை இழந்தபின்பு
ஒன்றுமே உதவவில்லை நீ வந்தபோது!
ஒருமுறை இருமுறை என்றில்லாமல்
பலமுறை இத்தவரை செய்ததினால்
பழகிவிட்டதால் இருட்டு கூட
சோர்ந்து விட்டது மனது கூட
என்ன செய்வேன் இந்நிலையில்?
அவசர(எமெர்ஜெச்சி) விளக்குகூட இல்லை கையில்
வழக்கம்போல் நீயே தேடிவந்து
வழிகாட்டு உன் ஒளியதனால்.
15-09-1997. லக்னோ (உ.பி)

96. கூடவே போராடு

எதிலும் ஓர் குறைவில்லை ஸ்வாமி
எல்லாம் எனக்கு நிறைவாய்த் தந்தாய்.
அழகைத் தந்தாய், அறிவைத் தந்தாய்
அமைப்பாய் ஓர் வடிவைத் தந்தாய்
மதியுடன் பல திறமைகள் தந்தாய்
மாண்புடன் வாழவே வழியும் தந்தாய்
எல்லாம் தந்தது போதாதென்று
உன்னையும் தந்தாய் உய்யவேண்டி
கேட்காமலே எல்லாம் தந்தநீ
கேட்டும் ஒன்றை ஏனோ மறுத்தய்
குட்டும் தூதனாய் கூடவே என்னுடன்
முள்ளாய் வாழும் "சுயத்தை" மட்டும்
கிள்ளி எறிய பலமுறை வேண்டியும்
ஏனோ இன்னும் இறங்க மறுத்தாய்
என் குறையில் உன் பெலன் விளங்க
பல வழிகள் உனக்கே இருந்தும்
ஏனோ வைத்தாய் இப்போராட்டத்தை
என்ன செய்வேன் இனி புரியவில்லை
"என்கிருபை உனக்குப் போதும்"
என்றுமட்டும் கூறி ஒதுங்கிடாதே!
கூடவே வந்து என்னுடன் போராடு
உன்குணம் என்னில் காணும் வரை!
15-09-1997. லக்னோ (உ.பி)

97. மறுவழி ஏது?

உன்சித்தம் என்னவென்று அறியாமலே
ஓராயிரம் செயலை முன்வைத்தே நாளும்
ஓடியே திரிகின்ற பேதைக்கு இறங்கி
ஓர்வழி காட்டுவாய், வேண்டினேன் நானும்.
சஞ்சலம் கொண்ட மனதுடனே வாழ்ந்து
சரியான பாதை எதுவென அறியாமலே
மதிகாட்டும் வழியிலே மனதையும் செலுத்தி
ஓடுகின்ற பேதைக்கு ஓர்வழி காட்டு
அறியாமல் செய்த பிழை என்றேகூறி
ஐயனே வரவில்லை உன்னடித் தேடி
தெரிந்தே செய்தபிழை என்பதால்தானே
தேடினேன் உன்னடி முக்தேசன் நானே!
ஓர்நாள் இருநாள் என்றே இல்லாமல்
ஒவ்வொருநாளும் போராடு கின்ற
உன்னடியானுக்கு உதவவில்லை என்றால்
உய்ய வழிவேறுண்டோ உன்னருளுமன்றி?
28-02-1998. துர்காபூர் (மேற்கு வங்கம்)

98. வாழ வேண்டும்

இந்நாளிலும் நீதந்த வாழ்வினை
வாழ்ந்திட வேண்டும் உன்துணை
அந்தந்த நாளில் வந்து சேர்ந்திடும்
காரியங்களை எண்ணிடும் போதிலே!
சொந்த பெலத்தில் செய்து முடிக்க
துணிவுகொள்ளாது உன்னருள் நாடி
வந்து நிற்கும் அடியேனுக்கிறங்கி
வரவேண்டும் நீயும் வழிவேறு இல்லை!
19-06-1998. ஈரோடு.

99. உன்னருள் வேண்டும்

அனுதின வாழ்வில் உன்னருள் ஒன்று போதும்
ஐயனே எனக்கிங்கு இனிவேறென்ன வேண்டும்?
பொல்லாத உலகினில் போராடும் போது உன்
பெலன்மட்டும் வேண்டும் புனிதனே நாளும்
எல்லாம் நிறைவாக நடந்திடும் போது
என்மனம் நாடாது உன்னருள் வேண்டி
பொல்லாத உலகினில் சிறு போராட்டம் வந்தால்
உடன் புலம்பிடும் மனம் நாளெல்லாம் வேண்டி
நன்றே, தீதே வறினும் நான் அதை எண்ணி
கலங்காமலே உன்சித்தம் ஒன்றே நிறைவேற
என்சிந்தை சரீரத்தை நீயாள நாடி
எப்போதும் வரவேண்டும் உன்னடி தேடி
14-08-1998. ஈரோடு

100. உன் சுதந்திரம்

ஒருநாள்போய் மறுநாள் வந்தது
உன்னருளாலே எல்லாம் கிடைத்தது
இந்நாளும் நன்நாளாயிருக்க
ஐயா அருள்வாய் உன்தயவிருக்க
வாழ்வின் நோக்கம் இதுதானென்று
வகையாய்க் கூறியவர் எவரும் இல்லை
நோக்கம் இன்றி நீ படைக்கவும் இல்லை
இதையுணர்ந்தால் தொல்லை யில்லை
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே-ஆனால்
வகையாய் அதை உணர்ந்தவர்க்கே
சுயநலம் கருதியே வாழ்ந்திருந்தால்
அதுபோல் நரகம் வேறு இல்லை
உண்ண, உடுத்த உடல்சுகம் தேட
உரிமையுள்ளது அனைவருக்கும்-ஆனால்
பிறர் நலம் அழித்து அவற்றை அடைய
உரிமை இல்லை இங்கு எவருக்கும்
தன்னுரிமைக்காய் போராடும் நீ
தயவாய் அறிவாய் ஒரு நீதி
உன்கைகோலின் சுதந்திரம் என்பது
அடுத்தவர் மூக்கின் எல்லை வரை
இந்த நீதியை இறைவா நீயும்
உன்நெறிமூலம் உலகில் வைத்தாய்
அந்நெறியின்படி அனுதினம் வாழ
அருளைத்தருவாய் மீண்டும் ஒருமுறை!
19-03-1999. மஹரி (ரீவா. ம.பி)
Faceless Space

In describing his bhakti, Sant Sevanand gave a list of things that cannot separate him from the love of God, however his list is not exhaustive. We can add more things to his list according to the needs and demands of our time. If I were to add anything that is relevant for our time, I would include ‘neither mobile phone, nor internet or T.V.’ will separate me from the love of God.

These modern gadgets are necessary evils and we cannot avoid their role and service in our lives, but anything that serves our need should remain only as our servant and should never become our master. Of course, even if we do allow them to separate us from the love of God, as the merciful one, She will forgive us and wait patiently us to return to Her.

These modern gadgets can also separate us from one another. We have gone wrong by allowing these devices to control us and to separate us from one another in relationship—within the home and outside of the home.

After the modern word ‘tension’ came into our vocabulary (which we never heard as young people back in the 1960s and 1970s) came the word ‘SPACE’. We all demand our own space in order to have a personal and private life. The reality, however, is that being a social animal, we cannot have a private life. Giving such ‘space’ to individuals will help us to have smoother and better cooperation in our corporate lives, but the cost that we pay for that space is very high. The demand for ‘space’ has been met with acceptance by big companies, which have created separate ‘cabins’ for every individual in the office. Where we went wrong was bringing the same ‘cabin’ back to our home—if not physically at least mentally.

The individuals in many homes, once they return from the outside world, sit before their own cabin—the children before the computer, the father before the TV watching Cricket, and the mother in the kitchen. After dinner they exchange their cabins—now the mother before a ‘mega’ serial, the children with their mobile or homework, and the father with the computer. The worst scene is a (newly married) couple without children and living separate from their elders; these individuals can combine many of these cabins at one time. While browsing the Internet, they will watch T.V. (some match) and meanwhile will talk with others by wearing an earphone connected to the mobile (and also giving commentary about the match). I came to know that one can now watch matches on one side of the computer screen and in another half one can work; this will further aggravate the problem as they need not interfere in the ‘space’ of others who watch TV. Women can watch their mega serials or children their cartoon and elders can happily live in their ‘computer cum TV cabin’. All these are done in the name of giving and respecting other’s ‘space’.

But this space, instead of helping us live a better life, creates mental walls that separate us from each other. Gone are the days where life is lived together. Soon a day will come when the mother will give a call to the children to come for the dinner and the children will send an SMS or email to their father to join—all under one roof. The typewriter replaced the art of letter writing by hand, which carried along with it a human touch. Now email has completely wiped out the art of letter writing. Human touch—physical touch with flesh and blood—is so vital to have a healthy mental life. This modern trend of giving ‘space’ is depriving many of that legitimate need. Babies lose much needed physical contact with their parents, particularly that of the mother. Even couples need external stimulants and visuals aids to have romance. We need not talk about elders—who have no space in many people’s lives.

We fail to realize that by giving such ‘space’ we lose our ‘face’ as human beings (as a father, mother, husband, wife, child, parent and friend). We need to celebrate our relationship with each other both at home and outside.

Dayanand Bharati, Gurukulam, May 28, 2011

Friday, September 23, 2011

24-08-1993 மத்தேயு 8:19-22 வாசகங்களை தியானித்தபோது எழுதிய பாடல்:

55. பின்செல்

தலைசாய்க்க இடமே இல்லை
தரணியில் இறை மைந்தனுக்கு
அனைத்தையும் படைத்த உனக்கு
அண்டிட இடமில்லை இங்கு!
உன்பின் செல்கின்ற எமக்கு
இதுவே நீ நியமித்த கணக்கு.
"எங்கே சென்றாலும் பின்னே
ஏகிடுவேன்" என்ற போதும்
"எஞ்சிய செயல் ஒன்று உண்டு
என்னை ஈந்திட்டவர்க்கு
ஈமக்கடன் செய்யும் வரை
என்னாலாகாது உன்பின் செல்ல"
என்றுரைத்து நின்றபோது
"இறந்தோரை சுமந்து செல்ல
எத்தனையோபேர் உண்டு உலகில்
மரித்தோரை மரித்தோர் எரிப்பர்
மாறாத மாந்தர் செயலை
செய்திட உனக்கில்லை நேரம்
செல்வாய் என்பின்னே நீயும்"
சொல்லிய இறைமகன் தானும்
சென்றானே தன்கடன் செய்ய
திகைத்தே நின்றிட்ட சீடன்
செய்திட்ட தீர்மானம் என்ன?
பதிலேதும் வேதத்தில் இல்லை
பரிகாரம் அவனிடம் இல்லை
பகிர்ந்திடக் காரணம் பலவே
பாங்காய் நம்மிடம் உண்டே!
ஏர்மீது கைவைத்த பின்னே
திரும்பிட நேரமே இல்லை
விரைவோமே அவன்பின் நாமும்
வெகுதூரம் செல்லும் முன்னே!

போராட்ட மற்ற நாளே, நேரமோ மனித வாழ்வில் இல்லை. அதுவும் ஆன்மீக வாழ்வில் ஜான் ஏறினால் முழம் சறுக்குதல் என்பது இயல்பான ஒன்று. இச்சூழ்நிலையில் இறைவன் பாதம் பிடிப்பதுவன்றி வேறு வழியும் இல்லை. முக்தேசனுக்குள்ளாக நாம் ஏற்கனவே வென்றவர்கள். எனவே தோல்வியையும் அப்படியே ஏற்காமல், அதேசமயம் சுயபெலத்திலும் நிற்காமல் இறைவன் பாதம் சரணடைவதுமட்டுமே ஒரு பக்தனின் இயல்பு:

56. ஏற்கேன் தோல்வியை

கதறிடும் ஏழைகுரல் கேட்கலையோ?
கடினப்பட்டதோ உன்மனம் இங்கு?
காரணம் உண்டே என்னை நீ வெறுக்க!
பதிலில்லை என்னிடம் அதையே மறுக்க
உலகம் மாமிசம் பிசாசு என்று
என்னிடம் போராடும் சக்திபல உண்டு
அவற்றை மேற்கொள்ள ஆகாதுஎன்று
அண்டினேன் திருவடி கலங்கியே நின்று.
நீ எனக்களித்த வாக்கினை நினைந்து
நாடினேன் மாறாத கருணையில் நனைந்து
தள்ளிடாதே என்னை சற்றேனும் மறந்து
தவிக்கின்றேன் என்நிலை தன்னையே நினைந்து
நிலையான புத்தி என்னிடம் இல்லை
உனக்கதை உரைக்கத் தேவையும் இல்லை
வாக்கினைப் பற்றியே வாழவும் இல்லை
வருந்திய செயலுக்கோ எல்லையும் இல்லை
ஆயினும் நான்செய்ய அறிவேனே ஒன்று
தோவிதனை அப்படியே ஏற்காமல் இன்று
தோள்தட்டி நின்றேன் உன்பெலன் கொண்டு
தோற்பதோ நிச்சயம் நானில்லை என்று
துணிவாகத் தெரிந்தபின் உறுதியாய் நின்று
எதிர்த்திடத் துணிந்தேன் தைரியம் கொண்டு
எனவே தோல்வியே இல்லையே என்றும்!

25-08-1993. டா (உ.பி)

உள்ளம், எண்ணம், நோக்கம், செயல் ஆகிய அனைத்திலும் உண்மையாய் இருக்கவேண்டும் என்று எண்ணியபோது எழுதிய பாடல்:

57. உண்மை வேண்டும்

பல்லவி

உள்ளத்தில் உண்மையே வேண்டும்
உத்தமனே உன்னைப் பற்றி நடந்திட--உள்ளத்தில்....

சரணம்

எத்தனை பலவீனம் என்வாழ்வில் வந்தாலும்
எவ்வளவுமுறையே தடுமாறி வீழ்ந்தாலும்--உள்ளத்தில்....

கவி

உள்ளத்தை அறிந்தவன் நீ
உன்னிடம் மாறைத்து
ஓர்செயல் செய்வதாய்
என்னை நானே
ஏமாற்றிக் கொள்ளாமல்--உள்ளத்தில்....

எண்ணத்தை அறிந்தவன் நீ
மனம்போன போக்கிலே
மருவியே வாழாமல்
மாய்மாலம் எதுவுமே
வாழ்விலே செய்யாமல்--உள்ளத்தில்....

நோக்கத்தை அறிந்தவன் நீ
பிறர்நலம் கருதியே
உழைப்பதாய்க் கூறியே
சுயநலம் கருதியே
காரியம் செய்யாமல்--உள்ளத்தில்....

25-08-1993.. கோண்டா. (உ.பி)

58. இதயத்தின் நிறைவு

உதடால்மட்டும் துதித்தால் போதுமோ?
உள்ளம் உன்னிடம் வந்தே சேராமல்?
ஊர்மெச்ச நாமும் வாழ்ந்தாலே போதுமோ?
உண்மை ஒன்றும் வாழ்க்கையில் இல்லாமல்!
குருடருக்கு வழிகாட்டும் குருடர் போலவே
குவளயத்தில் பலர் போதனை செய்கிறார்
இடறுவார் அவர் ஒருவரில் ஒருவர்
இகத்தில் இதுவென்றும் மாறாத உண்மையே!
அகத்தில் அசுத்தம் ஆயிரம் இருக்கையில்
ஆடம்பரம் என்ன புறம்பான செயலில்
இதயத்தில் உண்மை என்றும் வேண்டும்
ஐயனே அதற்கு நீ உதவிடவேண்டும்!
இதயத்தின் நினைவால் வாயது பேசும்
இதைஉணர்ந்தே நான் இங்கு நன்று
தீட்டுள்ள இதயம் தூய்மை பெறவே
தூயவா உன்னருள் நாடினேன் இன்று
31-08-1993. கோண்டா (உ.பி)

59. உன் பிள்ளையாய்

அறிவால் உன்னை அறிந்திட முடியுமோ
ஆன்மாவில் உண்மைத் தாகமே இல்லாமல்
ஆயிரம் கற்றாலும் உன்னருள் கிட்டுமோ?
ஆவியில் எளிமை என்னிடம் இல்லாமல்!
புவியின் ஞானியைப் புறம்பேத் தள்ளி
புலப்பட்டாய் நீயும் பேதையாம் எனக்கு
பாலகன் என்வாயின் துதியே உனக்கு
உவப்பாய் இருப்பதும் என்ன கணக்கு?
இவ்வருள் ஒன்றையே என்வாழ்வில் என்றும்
முத்தேசனே இறங்கி அருளிட வேண்டும்
உன்மடி மீதில் வளர்ந்திடும் பிள்ளையாய்
உலகில் என்றும் வாழ்ந்திட வேண்டும்!

31-08-1993. கோண்டா (உ.பி)

"ஹேபரமேஷ்வர் சரணு துமாரி" என்ற ஹிந்தி பாடலைத் தழுவி எழுதப்பட்டது:

60. என் கதை சொல்ல

திருவடி தன்னைத் தேடியே வந்தேன்
என்மன வேதனை உன்னிடம் சொல்ல
உன்னிடம் மறைக்க ஒன்றுமே இல்லை
உள்ளம் முழுதும் நீ அறிந்ததினாலே
உருக்கம் நிறைந்தவன் என்பதினாலே
உன்னிடம் வந்தேன் என்கதை சொல்ல--திருவடி....

உள்ளொளி நீயே என்மனதினிலே
உண்மை வழி நீ உத்தம நண்பன்
உன்னிடமன்றி யாரிடம் சொல்வேன்
உள்மனப் பாரம் துன்பங்கள் யாவையும்--திருவடி....

அன்பின் கயிற்றால் உன்னுடன் பிணைத்தாய்
முக்திவழிதனை எனக்காய்த் திறந்தாய்
எனக்காய் உனது இன்னுயிர்த் தந்தாய்
அதனால் வந்தேன் இக்கதை சொல்ல--திருவடி....

13-09-1993. கோண்டா (உ.பி)

18-09-1993 (கோண்டா) அன்று இரவு இரண்டு மணிக்கு மீண்டும் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வலியின் காரணமாக வியர்க்க ஆரம்ப்பித்து மயக்கம் வந்தது. அருகில் யாரும் இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டேன். மறுநாள்காலை தொடர்ந்து வயிற்று வலியால் கஷ்டப்பட்டபோது, காலை தியானத்தில் இப்பாடலை எழுதினேன்:

61. ஓர் புலம்பல்

ஏன் என்று கேட்கவில்லை ஐயா
என்வாழ்வில் இத்துன்பம் ஏன்வைத்தாய் என்று?
உன்சித்தம் ஒன்றே வாழ்வில் நிறைவேற
ஒப்புவித்தேன் அன்றே உன்கையில் நிறைவாக
ஆனாலும் துன்பம் மிகவாகும் போது
என்செய்வேன் உன்னிடம் புலம்புதல் அல்லாது?
முணுமுணுக்கவில்லை முறண்பட்டே நானும்
முனகுகிறேன் இவ்வலி தாக்கிடும் போதும்
அறிந்தவன் நீயே அத்துன்பம் தானும்
அதனாலே வந்தேன் சிறுபிள்ளை நானும்!
மடிமீது தலைவைத்து தலைகோதி மெல்ல
"மகனே" எனக்கூறி ஆறுதல் சொல்ல
தாய்யன்றி இங்கு தனிமையில் உள்ள
சேய்க்கு நீயன்றி யாருள்ளார் சொல்ல?

26-10-1993 (கோண்டா)-அன்று சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டி இருந்தது. எதிர்காலம் பற்றிய சில கேள்விகளும் தோன்றின. ஆனால் அனைத்தையும் இறைவனிடம் கொண்டு சென்றபோது எழுதிய பாடல்:

62. எது வேண்டும்

இது வேண்டும் அது வேண்டும்
என நிதம் பல வேண்டாமல்
எதை நான் செயவேண்டும்
என உளம் நீ கொண்டாயோ
அதையே நான் செய்ய வேண்டி
அருளை நீ தருவாயே!

63. உள்ளபடி வா

வாழ்கின்றேன் இன்னும் வையகம் தன்னில்
வள்ளளே உந்தன் கிருபையதனால்
வீழ்ந்திட்ட நாட்களை எண்ணியே நின்றால்
வேதனை ஒன்றே மிஞ்சிடும் என்னில்
நொந்து நிற்பதால் பயனேதும் காணேன்
நோக்கினேன் உந்தன் அன்பினை நானும்
"உள்ளபடி வா" என்றுரைத்ததினால்
உருகியே வந்தேன் உன்னடி நானும்
படிந்திட்ட கறைகளோ பலப்பல வாழ்வில்
வழியேதும் காணேன் அவைகளை நீக்க
பரிவாக அன்று நீ சிந்திய குருதி
பரிகாரம் ஆயிற்று என்குறை நீக்க

17-02-1994

64. அருளுக்குக் குறைவில்லை

வேதாந்தம் சித்தாந்தம்
விளங்காத தத்துவம்
உருவாக்க முடியாத
உள்ளான ஒளியை
அருளான உன்வார்த்தை
ஒன்றாலே உள்ளத்தில்
நிறைவாக உருவாக்கி
நிலைபெறச் செய்தாய்
தவறாக வழிமாறித்
தடுமாறும் போது
தத்துவம் ஏதுமே
உதவாத போது
உன்னாவி ஒன்றாலே
உண்மையை விளக்கி
உன்னடி பின்செல்ல
உன்னருள் தந்தாய்
எதனாலே என்மீது
இத்தனைப் பரிவு
ஏதுதான் நீகண்டாய்
என்னிலே நிறைவு?
நோக்கினால் என்னில்
குறையன்றி வேறில்லை
ஆயினும் அவைநீக்க
அருளுக்கும் குறைவில்லை

இப்பாடலும் அடுத்த பாடலும் திருமதி. எம். எஸ். சுப்புலஷ்மி பாடிய இரண்டு பிரபலமான பாடல்களைத் தழுவி எழுதியது. அடிப்படைவாதிகள் இதை எதிர்க்களாம். ஆனால் என்போன்ற இந்து முக்தேசன் பக்கதர்களுக்கு அப்படிப்பட்ட உரிமை உள்ளது:

65. குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை மறைகூறும் இறைவா
குறை ஒன்றும் இல்லை ஸ்வாமி எனக்கு
எனக்கு குறை ஒன்றும் இல்லை ஐயா...

புலனுக்குப் புறம்பாக நிற்கின்ற போதும்
புனிதனே உன்னருள் எனக்கென்றும் வேண்டும்--குறை ஒன்றும்....

வேண்டிடும் நலம் யாவும் நிறைவாய் அருள்வாய்
வேண்டாத குணம்போக்க அருளும் தருவாய்--குறை ஒன்றும்...

தேவா அருள் நாதா
இறைவா என் தலைவா....
11-05-1994.

66. காண்பதெப்போது ஐயனே

காண்பதெப்போதென் ஐயனே
கண்குளிர நான்
என்கலித் தீர--காண்பதெப்போதென்....

புவிதனுக் கிறங்கியே
சிலுவையில் மரித்தாய்
அபயமென்றே வந்த
கள்வனைக் காத்தாய்
உபச்சாரம் அறியேன்
சிறியேன் நான் செய்பல
அபச்சாரம் பொருத்து
ஆட்கொண்ட உந்தனை--காண்ப....

01-04-1994

பஜகோவிந்தத்தின் ஒருபாடலின் அடிப்படையில் எழுதியது:

67. கழிந்தது காலம்

காலையும் சென்றது மாலையும் வந்தது
கழிந்தது ஓர்நாள் வாழ்வினிலே
கடந்தது கோடை வந்தது வசந்தம்
காலமோ விளையாடுது வாழ்வினிலே
கழிந்தது இளமை வந்தது முதுமை
காலமும் போனது வாழ்வினிலே
கண்கூடாய் இந்நிலைக் கண்டும்
களங்கமும் நீங்கலை மனதினிலே!

29-05-1994

68 வேண்டும்

சிந்தையில் தூய்மை வேண்டும்
செயலிலே உண்மை வேண்டும்
வாக்கிலே அருளும் வேண்டும்
வாழ்க்கையில் கிருபை வேண்டும்
நோக்கத்தில் தெளிவு வேண்டும்
ஆக்கத்தில் ஆர்வம் வேண்டும்
அழைப்பிலே நிலைக்க வேண்டும்
அதற்கு நீ உதவ வேண்டும்

07-08-1994. லக்னோ.

69 முடியாத மன்றாடல்

மன்னியும் ஐயாஎன மன்றாட முடியாத
மாபெரும் பாவியானேன்
மனதாலே செய்த பிழை பலவாகி அதனாலே
மீளாத பழிக்கும் ஆனேன்
எவ்வளவோ முறை என்னென்ன தீர்மானம்
எடுத்துமோர் பயனும் காணேன்
ஏன்னிங்கு என்வாழ்வில் இவ்வளவு தோல்விகள்
இதற்குமோர் விடையும் காணேன்
சோதனை பலவாக தாக்கிடும் போதிலே
செயலற்று நின்று போனேன்
சொல்லினில் கூறிட இயலாத இந்நிலையில்
சோர்வினால் தளர்ந்து போனேன்
பலவீனம் அதன்மீது பழிகூறி பலமுறை
பாவத்திலே உழன்றேன்
பரிகாரம் நீயன்றி வேறெங்கும் காணாமல்
பதறியே மீண்டும் வந்தேன்
கொண்டாலும் தள்ளினும் கோவே உன்னருளன்றி
குணம்காண வழியும் காணேன்
அன்றென்னை ஆட்கொண்ட அருளுண்டு உன்னிடம்
அதனாலே வந்து நின்றேன்
புலம்பிடும் புலையனின் பிழைதனைப் பொறுத்திடு
புனிதனே சரணடைந்தேன்.
13-09-1994. பெங்களூரு.

70 மீண்டும் தொடு

கேளாயோ இன்று
கதறலை இங்கு
கதறிடும் ஏழையின்
குரலை
பாவியே நானும்
பக்தியே காணோம்
பரிதபித்தே வந்தேன்
நானும்
உன்சித்தம் செய்ய
உடன்பட்டேன் இல்லை
அதனாலே குருடானேன்
வாழ்வில்
காணாதோர் காண
காண்போர்கள் வீழ
வந்தாயே புவிக்கு
நீயும்.
காணாதவன் என்றே
கதறியே வந்தால்
கண்திறப்பாய் நீயும்
இன்று.
காண்கின்றேன் என்றே
பெருமிதம் கொண்டால்
குருடனாய் நிற்பேனே
என்றும்.
நீதொட்ட குருடனாய்
நான்மாற இங்கு
நம்பியே வந்தேன்
அருளை.
வேறொன்றும் வேண்டேன்
வீணே இப்புவியில்
ஒருமுறை தொடுஎன்னை
மீண்டும்.
04-11-1994.

71 பேராசை வேண்டும்

பேராசை எனக்கிதில் வேண்டும் என்றும்
பேரின்ப வெள்ளத்தில் பாய்ந்துநான் நீராட
மூவாசை என்னும் மலமும் முற்றிலும் நீங்கிட
முதல்வனே என்றும் உன்னைப் பற்றியே நாடிட--பேராசை....

மண்ணாசை பொன்னாசை மற்றெல்லா ஆசைகளும்
மானிடர்க் கியல்பான ஒன்றே-ஆனால்
மனதினை மயக்கியே மாயையில் ஆழ்த்திடும்
வீணாசை எனில் நீக்க வேண்டியே--பேராசை....

உள்ளான வாழ்க்கையில் உறுதியாய் வளர்ந்திட
உன்வார்த்தை அனுதினம் வேண்டும்--அதுவன்றி
வீண் "ஓசை" எழுப்பிடும் வீணான தத்துவப்
பேரோசை நீக்கியே பொழுதும் உன்னருள் நாட--பேராசை....


72. மூடனே நானும்

மூடனே நான் முழுமனதாய் உன்னை
நாடியே நாளும் நன்கு தேடாவரை
வீணிலே போக்கினேன் காலமதை-உலகின்
ஞானமனதை வீணில் நாடும் வரை
மெச்சினர் மனிதர் ஞானியென்று-ஆனால்
கொச்சையான என் குணமறியாமலே
நல்வாழ்வை நாடாமல் நாளும்-பொய்
ஞானமதை வீணில் நாடியதால்
பயன் என்னபெற்றேன் கல்வியினால்
மனப்பரிசுத்தமற்று வீணில் வாழும்வரை
பாவிக்கிரங்குவாய் பரம்பொருளே
பக்தியுடன் அடிபணியும் மூடனுக்கே!

02-03-1995

73. உறவு வேண்டும்

உன்னோடு உறவு வேண்டும்
அதில் உள்ளான நிறைவு வேண்டும்
கல்லாகிப் போனபோதும் மனதுள்
கசிந்துருகும் உணர்வு வேண்டும்
சொலோடு செயலும் ஒன்றாய்
இல்லாத போது என்னில்
பொய்யான வாழ்வு ஒன்றே
மேலோங்கி என்றும் நிற்கும்
போராடித் தோற்றேன் நாளும்
பொழுதெல்லாம் என்னோடு நானும்
புனிதனே உன்னருள் வேண்டும்
புதுவாழ்வு என்னில் காண!
14-03-1995

74. நீ வர வேண்டும்

உள்ளான உணர்வோடு
உன்னோடு உறவாட
உனதருள் எனக்குவேண்டும்
பொய்யான வாழ்விலே
மெய்யான உன்னடிநாட
பேரருள் எனக்குவேண்டும்
கல்லாத மூடன்நான்
காண்கிலேன் வழிவேறு
ஐயனே உன்கருணை வேண்டும்
கணப்பொழுதும் தள்ளாமல்
கதறிடும் இக்குழவியை
காத்திட நீ வரவேண்டும்!
20-03-1995

75. பேதைக்கு குறைவேது?

எந்த நிலையிலும் மகிழ்வாய் இருக்க
எந் நாளும் நானும் அறிவேனே
எதையும் செய்ய என்னால் ஆகுமினி
என் ஐயன் என்னோடு உள்ளவரை
வாழ்வும் தாழ்வும் நான் அறிந்தேனே
பாங்காய் எனக்கவன் போதித்ததால்
குறைவும் நிறைவும் எனக்கினி இல்லை
எல்லாம் அவனுள் நிறைந்ததினால்
பலவீனன் ஆயினும் பெலன்பெற்றேன்
மதியீனன் ஆயினும் உள்ளபடி அறிந்தேன்
போதிக்கும் குருவாக என்நாதனிருக்கையில்
பேதைக்கு குறைவேது இவ்வுலகில் வாழும்வரை!
22-04-1995

76. ஓர் வேண்டுதல்

ஞானம் வேண்டும் நானொன்றும் அறியாத
மூடன் என்ற உண்மை அறிய!
நேயம் வேண்டும் உன்னை என்றும்
ஊள்ளபடி உணர்ந்து உன்னடி தொழுதிட!
ஆசை வேண்டும் ஆன்மீகக் கடல்மூழ்கி
அழியாமை என்னும் நல் முத்தெடுக்க!
அருளும் வேண்டும் அச்செல்வம் பிறர்க்கும்
பகிர்ந்து அளித்து உன் ஆசிபெற!
இரக்கம் வேண்டும் இல்லார்க்கு என்னால்
இயன்றவரை தந்து சேவை செய்ய!
எல்லாம் இருந்தும் ஐயனே நான்
உன்னோடு வாழும் உயர்வே வேண்டும்!
13-08-1995

77. புதிதாய் வேண்டும்

மீண்டும் எனக்கருள் வேண்டும்
முடிவில்லா உன்கிருபை வேண்டும்
தோல்வியுற்ற இவ்வாழ்வில் வெற்றி
தொடர்ந்திட உன்னருள் வேண்டும்
காமம், கோபம், லோபம் என
கணக்கில் அடங்கா துன்பம்
தாக்குகின்ற போது எல்லாம்
தயவுடன் எனைக்காக வேண்டும்
இவ்வேண்டுதலும் புதியதல்ல
மனவேதனையும் புதியதல்ல
ஆயினும் நீ காட்டும் தயவோ
அனுதினம் புதிதாய் வேண்டும்!
13-10-1995. ரீவா (ம.பி)

கீழ்வரும் பாடலை (அமெரிக்கப் பெண்கவி) எமிலிடிக்கன்சன் தன் நண்பருக்கு திருச்சபையைக் குறித்து எழுதியதைப் படித்த போது, அவரைப்போன்றே என்கருத்தும் இருப்பதை உணர்ந்து எழுதினேன்:

78. தி(தெ)ருச் சபை

கூடுகின்றார் ஒரு சபையாக
ஒருகொள்கை தன்னை அறிவிக்கவே
கும்பலோடு ஓர் "கோவிந்தா"
கண்டதே அல்லாது பயன் என்ன?
"சபை" என்கின்ற பெயராலே
சடங்காய்ப் போனது "மதமே"
சரியில்லை ஈது என்றால்
சபை எதிரி என்கிறார் என்னை
சட்ட திட்டங்கள் போட்டு
ஓர்கட்டிடத்திற்குள் கூட்டி
நடத்துவதும் சபை அல்ல
நான் அறிந்த உண்மை இது
வாரம் ஒருமுறை கூடியே
வழிபாடு என்ற பெயராலே
நடப்பதும் ஓர் நாடகம்
ஒத்திகை சில பார்த்தபின்
அனுமதி என்றால் இலவசம்
ஆனால் அனைவர்க்கும் அல்ல
"அச்சபை" கொள்கை ஏற்கும்
அங்கத்தினர்கட்கு மட்டும்
நல்லவேளை நாம் பிழைத்தோம்
நாடிவந்த இறை அருளால்
காத்திடு எஞ்சும் வாழ்வில்
கடைதேற உன் பக்தனாய்!
16-10-1995-௧௯௯௫.

பல சமயம் பிரார்தனை செய்யும் சமயங்களில், என் தோல்வி, பயம் போன்றவையே பெரிதாகத் தோன்ற, அதைக்குறித்து எழுதிய பாடல்:

79 கோழை

எல்லாம் இழந்திட்ட ஏழை
என்னில் பயம்கொண்ட கோழை
சொல்ல ஒண்ணா துன்பங்கள்
சோதனைகள் எனைத்தாக்க
வாழ்வில் சோர்ந்திட்ட மோழை!
சொல்லிடத் தேவையோ உனக்கு
என்துன்பத்தின் மொத்த கணக்கு
சோதனை வேதனை அத்தனையும்
வென்ற முக்தேசனே உனக்கு
என்னுடன் உனக்கென்ன பிணக்கு
அடித்தாலும் அணைத்தாலும் நீயே
ஆறுதல் கூறிடும் தாயே!
இணைத்தாலும் பிரித்தாலும் என்றும்
என்நிலைக்கானாலும் நானும்
என்றும் உன்னடி நாடும் சேயே!
09-12-1995. லக்னோ (உ.பி)

என் போராட்டங்கள் எவ்வளவாக இருந்தாலும் நாளும் என்னை நாடிவரும் இறைவனின் கிருபையை மட்டும் எண்ணியபோது, இப்பாடலை எழதினேன்:

80. நாடி வரும் கிருபை

நாளும் நாடிவரும் கிருபைக்காய்
நாதனே உனக்கு நன்றி
தேடித்தேடி என்னை தொடர்ந்து வந்தாய்
தொலைந்தே போதும் நாடியே வந்தாய்
எட்டி எட்டி சென்றேன் மனதாலே
கிட்டிக் கிட்டி வந்த பாவத்தாலே
கட்டியம் கூறி கோவே நீ வந்தாலும்
தட்டிக் கழித்தேனே கிட்டிய அன்பை
விட்டுன்னை விலகி எங்கு சென்றாலும்
தொட்டென்னை தொடர்ந்து மட்டில்லா அன்பால்!
காற்றைச் சிறகாக்கி கடைதூரம் சென்றாலும்
உனக்கு மறைவாக ஒளிவதும் எங்கே?
என்ன கண்டாயோ பாவி என்னிடம்!
உன்னைத்தான் மறந்தே ஓடிய போதினும்
தள்ளிடா உன்னருளை தியானிக்கும் போது
தடுமாறி வந்தேனே மீண்டும் உன்பாதம்
மனமும் கரைந்து மன்றாடி நானும்
ததும்பிய விழியோடு வந்தேனே நாளும்.
11-12-1995. லக்னோ.


81. அருளொடு செயல்

என்னுள்ளே அமைதி வேண்டும்
எனக்கதை அருளவேண்டும்
சொல் செயல் எனப்பலவாறு
வரும் சஞ்சலம் நீங்கவேண்டும்.
சிந்தையின் ஓட்டத்தை என்றும்
சீராக்க முயலும் போது
சிதறிடும் மனதை ஒன்றாக்கி
உன்சித்தம் அறிந்திட வேண்டும்
என்விருப்பம் போல எல்லாம்
என்வாழ்வில் நடக்காத போதும்
உன்சித்தம் எதுவென எண்ணி
உன்பாதம் பணிய வேண்டும்
நாள்தோறும் நான்வாழும் வாழ்வில்
பிறர் நலமெண்ணி உழைக்கவேண்டும்
சுயநலம் தலைத்தூக்கும் போது-உன்
சிலுவை என் சிந்தையில் வேண்டும்
கூறுவதும் மிகவெனக் கெளிது
ஆனால் கைகொள்ள முயலும் போது
உன்கருணையின் துணையில்லாது
கடைபிடிக்க என்னால் ஆகாது!
வெறும் தத்துவம் பேசி இவ்வாழ்வில்
முக்தியும் பெற இயலாது
அருளோடு செயலும் வேண்டும்
அதற்கும் நீ உதவ வேண்டும்.
15-01-1996. லக்னோ. (உ.பி)

82. வரும் வரை பொறுத்திரு

உன்னை உணர்வது என்பது
ஒருநாளும் இயலாத காரியம்
உள்ளொளி பெருக்கி நீயே
வரவேண்டும் என்னிடம் நாளும்
சஞ்சலமான என் மனமே!
சற்றேனும் நிற்கமாட்டாயோ?
என்னிடம் வருகின்ற இறையிடம்
ஓர்வார்த்தை பேச விடமாட்டாயோ?
ஆயிரம் காரியம் உனக்குண்டு
அறிவேனே அதனையும் நானும்
அவையாவும் சிறப்பாக செய்ய
அவன் அருள் வேண்டும் நாளும்
தேடி என்னிடம் வலிய வருகின்ற
தெய்வத்தைக் காணவே ஒருமுறை
எத்தனிக்கும் போதினிலே நானும்
கூத்தடிக்கின்றாய் ஆனாலும் நீயும்.
ஆ! என்செய்வேன் இறைவனே?
அருகில் வந்தபின் உன்னையே!
தடவியாகிலும் ஒருமுறை காணவே
தவிக்கின்ற என்நிலை காண்பாயே!
எட்டி நின்றபடி வேடிக்கை
பார்பதென்பதே உன் வாடிக்கை
அருளோடு நீகாட்டும் புன்னகை
அதுவே என்வாழ்வில் நம்பிக்கை
இவ்வளவு தூரம் வந்தபின்
இன்னும் சிலகணம் பொறுத்திடு
எனக்குள்ள வேலை முடித்தபின்
வருவேன் அதுவரைநீ பொறுத்திடு!
18-01-1996. லக்னோ

83. சுய சித்தம்

சித்தம் இருந்தாலே போதுமோ?
என்சுய சித்தம் இருந்தாலே போதுமோ?
இனிஒருபோதும் இப்படிச் செய்யேன்
என்றே நான்செய்த தீர்மானம் என்ன?
ஆயினும் என்செயலை ஆராயும்போது
ஐயகோ என்சொல்வேண் வீழ்ந்தேனே பின்னே
சுயபெலத்தை நம்பியே நாமும்
செய்யும் தீர்மானம் ஆயிரமாயினும்
தெய்வத்தின் அருள் சேராதவரை
வென்றிடமுடியாது இதுஇங்கு உண்மை!
19-01-1996. லக்னோ (உ.பி)

17-02-1996 அன்று மாலை, வழக்கப்படி மஹரியில் (ரீவா. ம.பி) நதிக்கரையோரம் உலவச்சென்றபோது இருந்த அமைதி என்னை மிகவும் கவர்ந்தது. பறவைகளின் இனிய ஓசை, மென்மையான குளிர், சிவப்பாய் மறையும் சூரியன் எனக்கு மிகவும் ஆனந்தத்தைக் கொடுத்தது. அநேரம் இறைவனை போற்றி எழுதிய பாடல்:

84. வேறென்ன வேண்டும்?

அமைதியான இந்த மாலையிலே--என்
ஐயனுடன் அமர்ந்த வேளையிலே
இனிமையான இசை சூழ்ந்திருக்க
என்னை மறந்துமே நானிருக்க--அமைதியான....

மெல்லிய குரலால் புள்ளினம் யாவும்
புனிதனைப் போற்றியே புகழ்ந்திருக்க
ஆர்பரித் தெழுந்த என்மனமும்
ஐயனைப் போற்றி பணிந்திருக்க--அமைதியான....

வேறென்ன இன்பம் வேண்டி நிற்பேன்
இங்கு மாறுபடும் இந்த உலகினிலே
அருகினில் அமர்ந்தே அவன் பாதம்
வருடியே சேவை செய்வதல்லால்--அமைதியான....

85. நிறைத்திடு நம்பிக்கை

நம்பிக்கை எனக்கு உண்டு
ஆயினும் ஐயனே என்னுளே
போராடும் இம் மனதிலே
அவ நம்பிக்கையும் உண்டு!
என்னதான் செய்வேன் நானே?
நீக்கிட அதனையும் தானே?
முயன்றேனே நானும் பலமுறை
ஆனால் தோற்றேனே இதுவரை
கூறிடத் தேவையோ உனக்கு?
என்நிலை அறிந்த உனக்கு?
நீக்கி அவநம்பிக்கை என்னில்
நிறைத்திடு நம்பிக்கை மீண்டும்!
வாரணாசி (காசி)14-03-1996. மாற்கு. 9:24.

86. ஆட்கொள்வாயே!

உன்பெலன் மட்டும் இல்லாவிட்டால்
ஓயாத இவ்வுலக வாழ்க்கையிலே!
உள்ளான மனதில் அமைதியே இல்லை
உருண்டோடும் இம்மனித வாழ்வில்
நாள்தோறும் என்னை நாடிவருகின்ற
நன்மை-தீமை எண்ணப் போனால்
எண்ண முடியுமோ அனைத்தையும்?
என்மனம் அவைநாடி செல்வதாலே!
கானல்நீர் தேடிய மானைப்போல
கதறியே என்மனம் ஓடினாலும்
நீர்காணா மான்போல் ஆகிடாது
நிலையான அருள்ளால் வாழ்கிறேன்
என்பெலன் தன்னை நம்பிநானும்
எதுவரை ஓடிட முயன்ற போதும்
ஆட்கொள்ளும் உன் அன்பினாலே
ஐயனே வாழ்ந்திட அருளிடும்!.
22-06-1996. பூனே (மஹாராஷ்டிரா)

Wednesday, September 21, 2011

இன்று மனதில் பலவகையானப் போராட்டம். எனவே காலையில் தியானிக்கக் கூடி முடியாமல் போயிற்று. மாலை வேதம் படிக்கும்போது, எபிரேயர் 2:1-2 வாசகங்கள் மிகவும் எச்சரிக்கையின் குரலாக வந்தன. அவற்றை நீண்டநேரம் தியானித்துக்கொண்டிருந்தபின், மிகவும் பயத்துடனும், கலக்தத்துடனும், மீதமுள்ள வாசகங்களைப் படித்தேன். அப்போது 2:18-ம் வாசகம் எனக்கு மிகவும் ஆறுதலும், தைரியம் அளிப்பதாகவும் இருந்தது. அப்போது எழுதிய பாடல்:

31. தாங்காத பாரம்

அறிவாயே என்துன்பம் என்னவென்று
அவனியில் நீ மனிதனாய் வந்த அன்று
சோதனை இல்லாத நாளே இல்லை
சோர்வின்று மீளவோ வழியும் இல்லை
ஏதுதான் காரணம் நீயும் கொண்டாய்
இந்நிலைக் கென்னை நான் தள்ளிக்கொள்ள?
அறிவாயே பாவத்தின் அந்தகாரத்தை
ஐயனே தாங்கேனே இப்பாரத்தை
"வருந்தியே பாரம் சுமப்பவரே
வாருங்கள் என்னிடம்" என்றுரைத்த
வார்த்தையை நம்பியே வந்தேன் நானும்
வள்ளளே காணாயோ என்நிலை தானும்
துடுப்பற்ற படகுபோல் என்வாழ்வு
தொடர்பற்றுப் போனது உன்னோடு
தேடியே நீ என்னை மீட்காவிட்டால்
தொலைந்தது என்வாழ்வு இப்புவியோடு
நீவந்த நோக்கமோ என்னை மீட்க
தேவையோ நான் அதை உனக்குரைக்க
அறிவேனே நான் உன் இரக்கமதை
ஆதலால் அண்டினேன் உன் பாதமதை.

20-11-1991. காட்மாண்டு (நேபாள்)


இன்று ஏற்பட்ட பலவிதமானமனப் போராட்டங்களுக்கு ஒரு விடுதலை கிடைத்தபோது (பாடல் 30&31-லைப் பார்க்கவும்) ஆனந்தம் மிகுதியால் எழுதிய பாடல்:

32. ஆனந்தமே

இராகமோ தாளமோ நானறியேன் இங்கு
பாடலோ பண்ணுமோ கேட்டறியேன்
நெஞ்சத்து உணர்வெல்லாம் எழுத்தாக்கி
என் நேசனின் பாதத்தில் படைப்பதன்றி--இராகமோ....

யாப்பின் இலக்கணம் நானறியேன் இங்கு
எதுகையோ மோனையோ இணைக்கறியேன்
ஆவியில் நான்கொண்ட அனுபவத்தை
என் ஐயனின் பாதத்தில் படைப்பதன்றி--இராகமோ....

பண்டிதன் அல்ல புலவன் அல்ல இங்கு
பார்மெச்சும் ஞானியோ நானுமல்ல
பாவத்தில் வாழ்ந்தென்னை மீட்டெடுத்த
பரன் முக்தேசனின் பக்தனன்றி--இராகமோ....

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே இங்கு
ஐயனின் புகழ்பாடல் ஆனந்தமே
நாதன் பாதத்தில் தாழவீழ்ந்து
நாளும் பணிவதே ஆனந்தமே--ஆனந்தம்....
20-11-1991. காட்மாண்டு (நேபாள்)

33. எதைத்தான் தருவேன்

ஏதுநான் தந்திடுவேன் ஏழைநான்
நாடிஎன்னைத் தேடிவந்த நாதன்தன்
மாறிடாத அன்புகொண்டு மீட்டதற்கீடாய்--ஏதுதான்....

பொருத்தனை எனச்சொல்லி பொருளையே
அளிப்பதனால் ஐயனின் அன்பிற்கீடாய்--ஏதுதான்....

சேவை எனச்சொல்லி செய்திடும் செயலெல்லாம்
செப்பறிய அன்பினிற்கு எப்பாங்கில் ஈடாகும்--ஏதுதான்....

வாழ்ந்திடும் வாழ்வதுமே தேவன்தந்தை பிச்சையதால்
வழங்கிட ஏதுமில்லை வள்ளலின் அன்பிற்கீடாய்--ஏதுதான்....

1991

நான்கண்ட பல வழிகளில் பத்தி நெறியே சிறந்தது என்பதை எண்ணியபோது எழுதியபாடல்:

34. பக்தி வழி

ஏதுகண்டு நான் பின்செல்வேன்
நாதனே ஏழை என்றும் உன்னை
கூறியே திரிகின்றார் கொள்கை பல
கூவி அழைக்கின்றார் அவர் பின்செல்ல--ஏதுகண்டு...

நாடினேன் நானும் ஞானமதை
நானிலத்தோர் போற்றும் பாதையதை
ஆயினும் அடைந்திலேன் அமைதியினை
ஆ! என்சொல்வேன் என்மனதின் நிலை--ஏதுகண்டு...

உழைத்திடு நாளும் உலகம் உய்ய
உண்டோ "வழி" அதனை வெல்ல?
என்றவர் கூறிய வழியும் சென்றேன்
ஏமாற்றமே கண்டேன் இறுதி வரை--ஏதுகண்டு...

துறந்திடு உலகமோ என்றும் மாயை
தொல்லை துன்பமே வாழ்க்கை எல்லை
துணிந்தவர் கூறிய பாதை சென்றேன்
தொல்லை துன்பமோ நீங்கக் காணேன்--ஏதுகண்டு...

பலவழி அலைந்தே சோர்ந்து நின்ற
பாலன் என்மீது கருணை கொண்டு
"பக்தி" என்னும் ஒரு பாதை தந்து
பதமடைய நீ தந்த வழியும் உண்டு--ஏதுகண்டு...

ஞானம், கருமம், துறவு எல்லாம்
தன்வரை உண்மைத் தனித்தனியே
ஆனால் "பக்தி" நெறி ஒன்று மட்டும்
பூரணமாக்கிடும் அனைத்தையுமே--ஏதுகண்டு...

சாத்தால் ஆஸ்ரம், 19-04-1991

"பக்தி ஒன்றே வழி" என்ற கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது அதை எழுதுவதை நிறுத்தி இப்பாடலை, 04-07-1991-அன்று சாத்தால் ஆஸ்ரமத்தில் இருந்த போது எழுதியது:

35. பக்தியே வழி

சித்தமது சுத்தமானால்
சேர்ந்திடும் ஞானமதால்
அகக் கண்ணும் தான்திறக்க
ஆன்மாவின் வடிவமதை
அறிந்திடலாம் உள்ளபடி
என்றுரைத்த வேதாந்த
வழிதன்னில் சென்றவரும்
இல்லைஇது உண்மைஇல்லை
என்றுணர்ந்து மனம்திரும்பி
வேறுவழி ஏதுமுண்டோ
உய்வதற்கு உலகில் இனி
என்றே திகைத்து நிற்க
நானறிவேன் அந்த வழி
நாதனவன் பாதமதை
அளப்பரிய பக்தியினால்
ஆரத் தழுவி நின்றால்
பக்தனவன் குரல் கேட்டு
பரமபதம் தான் நீத்து
பரிவுடனே தேடிவந்து
பக்தன்மேல் அன்புகொண்டு
பாங்குடனே ஏற்றிடுவான்
பக்தனிவன் சாட்சியிது
தாமதமேன் தயக்கமுமேன்
தஞ்சம் அடை அவன்பாதம்

05-07-1991-அன்று, சாத்தால் ஆஸ்ரமதில் இருந்தபோது, அருளானந்தன் (யோவான்) எழுதிய நற்செய்தியில் 6:1-35--ல், 26-ம் வாசகத்தை ஆழ்ந்து சிந்தித்தபோது எழுதிய பாடல்:

36. அகக்கண் திறப்பாய்

ஏதுதான் காரணமோ ஐயா
மாந்தர் உன்னைத் தேடிவர
நாடுகிறார் நாளும் உன்னை
நன்கறிவாய் நீ அவரை--ஏதுதான் காரணமோ....

தேகமதின் தேவை ஒன்றே
மேதினியில் மேன்மை என
நாடி ஓடித் தேடி என்றும்
நலிகின்றார் வாழ்வதனில்--ஏதுதான் காரணமோ....

வருந்தியே சுமை சுமந்து
ஐயா, வாடிய போதினிலும்
அறிந்திடார் மெய்ப்பொருளை
மந்தமே அவரின் நிலை--ஏதுதான் காரணமோ....

ஜீவ அப்பம் உண்டனெவே
சொல்லிய போதினிலே
ஏது விலை? என்ன எடை?
என்றுரைத்தே நாடுகின்றார்--ஏதுதான் காரணமோ....

அழிந்திடும் அப்பமோ நீ
அறிந்திலர் அடைந்தபின்னும்
அகக்கண் தான் திறப்பாய்
அறிந்திட உண்மையினை--ஏதுதான் காரணமோ....

ஆன்மீக வாழ்வில் நாம் செய்த பல பாவங்கள் நம்மை எத்தனை அழுத்தினும் இறைவன் தரும் அருள்கொண்டு முன்னேற முடியும் என்பதை எண்ணிய போது எழுதிய பாடல்:

37. ஏன் இரக்கம்?

ஏனையா இத்தனை இரக்கம்?
ஏழை என்மீது உனக்கும்
என்ன காரணம் கொண்டாய்
எனக்கும் புதுவாழ்வு தர?
கடைகெட்டப் பாவியே நான்
கண்டிலேன் ஓர்வழிதான்
கரைப்பட்ட வாழ்வதுதான்
கண்டரும் மாந்தரும் தான்
நினைக்கவே நெஞ்சமும் கூசும்
நித்தமும் நான் செய்த பாவம்
நினைவில் அலையாக மோத
மறந்தேனே புதுவாழ்வு காண
இதுவே ஓர் காரணமாகி
என்னுள் துன்பத்துள் மூழ்கி
தவித்துத் தடுமாறும் போது
பொழிந்தாய் அருள் ஏழைமீது
நன்றிக் கடனாக நானும்
ஒன்றும் அளிக்காத போதும்
எஞ்சிய வாழ்நாள் முழுதும்
உன்புகழ் பாட அருளும்

17-11-1991. காட்மாண்டு (நேபாள்)

மரூபமலையில், மலையப்பனுக்கு முக்திநாதனுடன் தங்கிவிடுவது நல்லதாக முதலில் தோன்றியது. பிறகுதான் இறைவன் சித்தம்பற்றி தேட ஆரம்பித்தான். அதைப்பற்றி தியானித்த போது எழுதிய பாடல்:

38. உன் சித்தம் செய்யவேண்டும்

சித்தம் ஒன்றே செய்ய வேண்டும்
எத்தனைக் கற்றாலும் ஏதருள் பெற்றாலும்--உன் சித்தமொன்றே...

என் ஆவல் என்தேவை என்றே நான் வாழாமல்
எப்போதும் உன்வார்த்தை ஒன்றேசிரமேற்கொண்டு--உன் சித்தமொன்றே...

வாழ்ந்திடும் வாழ்வில் உன்நாமம் ஒன்றையே
நானிலத்தோர் இங்கு நன்கறிந்து போற்றிட--உன் சித்தமொன்றே...

தேவை பலக்கொண்டோர் வாழும் இத்தேசமதின்
நிலைய் அறிந்தே நித்தமும் உளமுருகி--உன் சித்தமொன்றே...

மறுரூப மலையின் மஹிமையில் மதிமயங்கி
மண்டபம் கட்டியே உன்னுடன் தனித்து வாழாமல்--உன் சித்தமொன்றே...

நலம் எனக்கது என்றே நானும் எண்ணாமல்
உளமாற உன்பணி ஒன்றையே என்றும் செய்திட--உன் சித்தமொன்றே...
12-02-1992. கெகரஹா (ரீவா, ம.பி).

நம் மனநிறைவிற்காக சேவை செய்யாமல், பிறரின் தேவைக்காகவே செய்யவேண்டும் என்று எண்ணியபோது எழுதிய பாடல்:

39. அகம் அழிந்திட வேண்டும்

அகமது அழிந்திடவேண்டும் ஐயா
ஆன்மீகவாழ்விலும் வளம்பெற வேண்டும்
இகமதில் வாழ்ந்திடும் வாழ்வில் என்றும்
"சுய"மதை நீக்கிடவேண்டும் ஐயா--அகமது அழிந்திட....

"நான்" என்னும் எண்ணம் நாளும் ஓங்குதே
சுயநலம் பெரிதாய் என்றும் வளருதே
செய்திடும் செயலெல்லாம் என்நலம் கருதியே
ஜெயமெனக் கருள்வாய் இக்குணமீதிலே--அகமது அழிந்திட....

"நல்லோன்" என்றென்னை நாலுபேர் எண்ண
ஆடிய ஆட்டத்திற்கு அளவேதான் என்ன?
சொலொன்று செயலொன்று என்றே வாழும்
சிறுமை தன்னை நீக்கிட வாரும்--அகமது அழிந்திட....

"துறந்தே உன் சுயத்தை நீயுமே
சுமந்தே என்தன் சிலுவை தனையே
ஏகிடு என்பின்னே" என்றே உரைத்த
ஐயனே உன்னடி நானும்பின் செல்ல--அகமது அழிந்திட....

19-02-1992. கெகரஹா (ரீவா, ம.பி)

10-12-1992 அன்று காலை தியானத்திற்குப் பின் தமிழ்ப் பண் இசையில் எழுதிய பாடல்:

40. தீந்தமிழ்ப் பண்

தீங்குழல் யாழொடும் தேந்தமிழ்ப் பண்ணொடும்
தேவனின் கிருபையால் திருவடி அண்டினோம்
நாதனே நாயகா நண்பனே அன்பனே
நாடினோம் திருவடி நாளும் உன் அருள்வேண்டி
காலையும் மாலையும் கண்ணயர் வேளையும்
காத்திடும் கனிவுடன் கண்மணிபோல் எம்மை
ஆருளர் நீயன்றி அடியவர் மீதிறங்க?
அண்டினோம் திருவடி அனுதினம் உன்னருள்வேண்டி
உள்ளும்புறமும் ஒவ்வொரு செயலிலும்
உன்னருள் நாமத்தை உணர்வுடன் தியானிக்க
செய்திடும் செயலெல்லாம் செவ்வையாய்ச் செய்திட
சேவடி அண்டினோம் ஸ்வாமி உன்னருள் வேண்டி
வீண்சிந்தை வெறும்வார்த்தை வேண்டாத உறவுகள்
வேதனைத் தந்திடும் வீணான செய்கைகள்
யாவையும் நீக்கியே நாளும் உன்புகழ்பாட
நாதனே அண்டினோம் நல்லருள் புரிவாயே

15-12-1992-அன்று காலை மாற்கு 1;40-41 வாசகங்கள் என்னை மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வைத்தன. உடன் எழுதிய பாடல்:

41. மீண்டும் ஒருமுறை

சித்தமுண்டே ஸ்வாமி என்னை
இக்கணம் சுத்தமாக்க உனக்கு
தொட்டதோ பலமுறைதான்
ஆனால் சுத்தமாகவில்லை எதனால்?
நொறுங்குண்ட நெஞ்சமோ
நறுங்குண்ட ஆவியோ
நேர்மையோ வாய்மையோ
என்னில் நீகாணததால்
தள்ளினையோ என்னையும்
தயைஇல்லையோ உன்னுள்ளும்?
நீயளித்த வாக்கும் எங்கே?
என்பாரம் நீக்கிடவே?
ஏன்விட்டய் என்னையும்
என் இஷ்டம்போல் வாழவே?
ஏதுதான் இதற்குக் காரணம்
இக்கணமே சொல்லிடுவாய்
பாரினில் உன் பாதமன்றி
பாற்றிடவேறு ஏது கண்டேன்?
அதனால் பாதகன் மீதிறங்கி
பரிவாக மீண்டும் தொட்டிடுவாய்!


24-01-1993 அன்று இறைவன் கிருபையுடன் உள்ள முயற்சியே எல்லாவற்றிற்கும் அவசியம் என்று எண்ணியபோது எழுதிய பாடல்:

42. அருளும் முயற்சியும்

துணிவும் இறைவன் அருளும்
ஒன்றாய்த் துணைசேரும் போது
கலக்கம் ஆங்கே மனதில்
கணநேரமும் நின்றிடாது
முயற்சியில்லா வேண்ட.ல்
மூடத்தனமான செயலே
அருளைநாடா சுயமுயற்சி
ஆணவத்தின் உச்ச நிலையே
முயற்சி திருவினையாக்கும்
முயன்று அதில் முனையும்போது
அருளும் அதனைத் தொடரும்
அவனடி பணியும் போது
முடவன் தேனெடுக்க முயன்று
முயற்சி பலவும் செய்தும்
வெறும் விரல் நக்குவதன்றி
வேறொரு பயன் அடையான்
அருளற்ற முயற்சி முடமே
அறிவாய் இதனை மனமே
அருளும் முயற்சியும் இணைந்தால்
அடைவாய் வேண்டிய துணிவே!

05-02-1993 அன்று காலை தியானத்தின் போது எழுதிய பாடல்:

43. ஜெபமும் வேதமும்

சிந்தையின் ஓட்டமெல்லாம்
ஜெபமாக மாற்றி
இறைவனின் பாதத்தில்
படைத்திடும் போதினிலே
சிதறிய மனமதுவே
சீராக மாறி
சேர்ந்திடும் அவன்பாதம்
ஜெபமாக மாறி
எண்ணமது அடங்காது
எவ்வளவு முயன்றாலும்
எளிதாக அதையடக்க
ஜெபமே ஆதாரம்
அதிக வசனிப்பால்
அடங்காது மனமே
அமர்ந்திடு அவன்பாதம்
தியானத்தில் தினமே
வேத மந்திரமெல்லாம்
வெறும் வார்த்தையாமே
"வேண்டுதல்" அன்றிஅதை
தியானிக்கும் பொழுதே
ஜெபமொடு வேதமது
சேர்ந்திடும் பொழுதே
சிந்தையது சரணடையும்
இறைவனின் பாதம்

01-03-1993-அன்று காலை தியானத்தின்போது, பெரும்பாலன மக்களின் இறை உணர்வு ஒருவித பயத்தின் காரணமாகவே இருப்பதை சிந்தித்த போது எழுதிய பாடல்

44. அன்பின் உயர்நிலை

அன்பன்றோ அவனியில் உயர்நிலை
அறியாரே மானிடர் அந்நிலை
அதைக்காட்ட அடைந்தாய்நீ என்நிலை
துணிவாய்த் துறந்தே உன்நிலை
அச்சம் ஒன்றே அவனியில்
அனைவர்க்கும் இறை மீதுஉள்ளது
அந்தோ என்னே பரிதாபம்
அதன்கண் வாழும் மனுநிலை
அன்பற்ற தொழுதலின் அவநிலை
உயிரற்ற உடலது ஆகுமே!
உண்மை பக்தனின் உயிர்நிலை
உள்ளான அன்பது ஆகுமே
உலகிற்கு இவ்வழி காட்டவே
உவந்தே வந்தாய் மனுவாக
உன்னுயிர் அளித்தனை எமக்காக
ஊற்றினை அன்பதை உயர்வாக
அன்பின் வழியது உயர்நிலை
அறிந்தேன் இன்று அந்நிலை
அறிந்தே நீயும் என்நிலை
அருள்வாய் மென்மேலும் அந்நிலை

ரீவாவிற்குச் சென்றபோது, சில தவிர்க்கமுடியாத காரணத்தால் காலைக் கடன்களை முடிக்கக் கூட மிகவும் அலையவேண்டி இருந்தது. ரீவாவில் தங்கிய போதெல்லாம் சில அடிப்படையான தேவைகள் கூட பலமுறை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. 03-04-1993-அன்று அத்தகைய ஒரு நிலை ஏற்பட்டபோது எழுதிய பாடல்:

45. சுய வெறுப்பு

ஆடம்பரத்தையே நான் நாடவில்லை
அதிகவசதியும் தேடிடவில்லை
அடிப்படைத் தேவையே மறுத்திடும்போது
ஆத்திரம் ஒன்றே மேலோங்கிடுது
எல்லோரும் பிறந்தது சமமாக என்றால்
ஏன் இந்த முறன்பாடு உலகினில் இங்கு?
பசி ஏப்பம் விடும் பாமரர் ஒருபுறம்
புளியேப்பம் விடும் பணக்காரர் மறுபுறம்
யாரிடம் சென்றே முறையீடு செய்வது?
"ஏன்" என்ற கேள்வியே என்றும் மிஞ்சுது
வல்லவன் வகுத்ததே வாய்க்கால் ஆனபின்
வறியவர் மீண்டிட வழியிங்கு ஏது?
இரக்கின்ற நிலையை உலகினில் வைத்த
இறைவன் அன்றி பொறுப்பிதற்கு யாரு?
"இரந்து உயிர்வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான்"
என்று வள்ளுவன் இயற்றிய குறளும்
எவ்வளவு உண்மை இந்நிலையினிலே!
ஏழ்மையின் கொடுமையைத் தாங்காமல் நானும்
இறையிடம் முறையிட்டேன் இந்நிலைக் காண!
பதிலுக்கு எதிர்பார்து காத்திடும்போது
பதிலாக வந்தது கேள்வியே இங்கு
"என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை செய்நன்றி கொன்றமகற்கு.
என்பதும் வள்ளுவன் இயற்றிய குறளே
ஏனிதை மறந்தாய் என்னிய மகனே?
மானிடர்த் தேவைக்கு வேண்டிய யாவும்
மனமுவந்தளித்தேன் இயற்கையில் நானும்
அவரின் ஆசைக்கு எல்லையே காணும்
அதற்குமுன் வரியவன் ஆனேன் நாணும்
உள்ளவன் ஏய்க்கிறான் வரியவனையே
தன்சுகம் ஒன்றையே என்றும் நினைப்பதால்
ஏழையும் ஏழ்மையின்மீது பழி கூறி
என்றும் வாழ்கின்றான் சோம்பேரியாய்
இருவர்க்கும் இடையில் ஓர் சமநிலை வேண்டும்
அதற்கும் ஆயத்தம் என்றால் நீயும்
அனுதினம் பின்தொடர் என்னை என்றும்
சோம்பேறி-செல்வந்தர்க்கு மத்தியிலே
செல்வத்தைப் பங்கிடவோ வந்தேன் நானும்?
என்னிடம் உள்ளது பதிலோ ஒன்று
ஏற்றிட ஆயத்தமா நீ இங்கு இன்று?
சுய வெறுப்புடன் சீடர் சிலரேனும்
சிலுவையை சுமந்தே நாளும் பணிவோடு
என்னைப்போல் உலகினில் வாழ்ந்திடும் அன்று
சமநிலை வந்திடும் தரணியில் நன்று!"


1993-அன்று பெரிய வெள்ளியன்று எழுதியது

46. சிலுவை என்மேன்மை

சிலுவையில் தொங்கிய என்நேசனின்
சிந்திய இரத்தத்தால் சுகமாயினேன்
சிலுவையே மேன்மை என்வாழ்விலே
சேவிப்பேன் அதனை எந்நாளுமே
வினைமூலம் சிலர் தேடினார் மீட்பை
ஞானத்தின் துணையை நாடினார் சிலரே
பக்தியின் பெயராலே பரமனைத் தேடியே
பயனற்ற வழிபாட்டில் வீழ்ந்தனர் பலரே!
புத்தியின் மேன்மையால் புதுவாழ்வு தரவே
சீர்திருத்தப் பாதையில் சென்றனர் சிலரே!
"புதுமை புதுமை" எனக்கூறிய பலருக்கு
கேளிக்கையானது ஆன்மீக வாழ்வே
நல்வழி காணவே நானும் முயன்றே
நாடினேன் பலவழி நாளும் இங்கே!
சிறுமையாய்த் தோன்றிய சிலுவை ஒன்றே
தெளிவாக்கித் தந்தது ஆன்மீக வழியை.
25-05-1993. தில்லி.

47. ஆட்கொள்வாய்

என்னையும் மீறி என்னை
ஆட்கொண்டருளாவிட்டால்
என்மீதே எனக்கு வெற்றி
என்பதும் இல்லையன்றோ!
நடைபயிலும் குழவியே நான்
நாலடி எடுத்து வைத்தால்
தடுமாறி விழுகின்றேன்
நன்கறிந்த தாயே நீ
மெல்ல என் கரம்பிடித்து
என்னுடனே நீ நடந்து
தடுமாறும் போதெல்லாம்
தாங்கிடுவாய் தயவாக
விட்டுப் பிடிப்போமென்று
வேடிக்கைப் பார்த்தாயானால்
விழுவதோ உண்மையது
ஆனால் பழிவரும் உன்மீது
வேண்டாம் இவ் வேடிக்கை
வேண்டுதல் அல்ல இது!
ஆணை இடுகின்றேன்
ஆட்கொண்டு வழிநடத்து!
முக்தி நாதனே உன்மீது
எனக்குள்ள உரிமையினால்
உளறுகின்றேன் இதுபோல
மழலைமொழி பொறுதருள்வாய்!

27-05-1993. வாரணாசி. மாத்ருதாம் ஆஸ்ரம்.

வாரணாசியில் மாத்ருதாம் ஆஸ்ரமத்தில் ரீவாவில் உள்ள என் சீடர்களுக்காக நடந்த ஒரு கூடுகையில், லலன் பாண்டே, செய்த ஒரு காரியம் மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆயினும் அதை அவனிடம் கூறும்முன் 28-05-1993 அன்று மாலை நான்கு மணிக்கு அவனுக்காக குறிப்பாக பிரார்த்தனை செய்ய அமர்ந்தேன். ஆனால் அவன் குறையை இறைவனிடம் கூறும்முன், என்குறைகள் பெரிதாக என் மணக்கண் முன்னே வர ஆரம்ப்பித்தன. உடன் அவனுக்காக பிரார்த்தனை செய்வதை விடுத்து என்குறைகளுக்காக இறைவனிடம் புலம்ப ஆரம்பித்தபோது எழுதிய பாடல்:

48. என் குறை

என்குறை பெரிதாக என்முன் நிற்கையில்
எப்படி உரைப்பேன் பிறர்குறை உன்முன்?
பெரிதே மனப்போராட்டம் அதன்மீது
பெற்றிலேன் வெற்றியே பலமுறை முயன்றுமே!
என்தகுதி ஒன்றையே ஆதாரமாய் எண்ணியே
பிறர்குறை நீக்கிட முடியாது உண்மையே
புனிதனே திருவடிப் புகலிடம் தேடியே
போராட வந்துள்ளேன் என்குறை போக்கவே
என்குறை பிறர்குறை எல்லாமே உன்மீது
ஏற்றுக்கொண்டாய் அன்று சிலுவையின் மீது
எனவே உன்னருள்மீது நம்பிக்கை வைத்து
நாடினேன் மீண்டுமே நாதனே உன்திருவடி

16-06-1993 அன்று காலை தியானத்திற்குப்பின் கோண்டாவில்(உ.பி) இருக்கும்போது எழுதியது:

49. மீட்கும் கருணை

விழுவதோ என் இயல்பு
விழுந்தபின் எழுந்திருக்க
இயலாமல் நான்கிடக்க
தூக்கிமீண்டும் விடுவதும்
துங்கவனே உன் இயல்பு!
ஆனால் எத்தனை நாள்
ஐயனே இது தொடரும்?
ஒன்று செய் இனிமேலே
விழுந்தாலாலே விட்டுவிடு
எப்படியோ போவென்று!
பாவிமேல் கருணையினால்
பன்றிபோல் சாக்கடையில்
பலமுறை புரண்டாலும்
பதைபதைத்துத் தாய்போலப்
பரிவுடனே மீட்கின்றாய்.
செய்நன்றி கொன்றுன்னை
சிலுவையிலே அறைகின்ற
சிறுமையினாய் ஆனேனே
சீற்றம்கொள் தயங்காதே
சிறிதேனும் கலங்காதே!
தாங்க இயலவில்லை
தவிக்கின்றேன் நாளுமே
தடுமாறும் பாவியென்னை
ஆட்கொண்டு வழிநடத்து
அண்டினேன் திருவடியை!
உதைத்து நீ தள்ளினாளும்
உன்னடி தன்னை விடேன்
வேறெங்கு கண்டிடுவேன்
மீட்டெடுக்கும் கருணையினை
மேதினியில் உனிலன்றி?

தேவயற்ற பல அன்றாட காரியங்கள் நாம் இறைவனுடன் செலவிடவேண்டிய நேரத்தையும், அவனுடன் உள்ள உறவையும் பலவாறு பிரிப்பதை எண்ணியபோது எழுதியபாடல்:

50. பிரிவினை

பிரிக்குதே எனதன்பை உன்மீது
புவியின் பலவித காரியங்கள்
அவைமீது நான்கொண்ட ஆசைகளும்
ஐயனே அழிக்குதே ஆதி அன்பை
நான்செய்யும் பலவித காரியங்கள்
நாளுமே என்நலம் நாடி மட்டும்
நானுமே செய்கின்ற காரணத்தால்
நலிந்தது எனதன்பு உன்மீது!
சொல்லிட காரணம் பல உண்டே
செய்திடும் செயல்கள் அத்தனைக்கும்
ஆயினும் என்மனம் நன்கறியும்
அவைமீது நான்கொண்ட பற்றினையும்
ஒவ்வொருநாளும் எதோ ஒன்று
நம்மிடைப் பிரிவினை செய்திடவே
ஆயத்தமாகிக் காத்து நிற்கும்
ஐயனே என்செய்வேன் இந்நிலையில்?
என்மீது கொண்ட அன்பதனால்
இம்மட்டும் காத்து வந்ததுபோல்
இனிமேலும் தாங்கி நடத்தாவிட்டால்
எனக்கில்லை வெற்றி இப்போராட்டத்தில்
16-03-1993. கோண்டா (உ.பி)

தனிமையான வாழ்க்கை பல இழப்புக்களைச் சந்தித்தாலும், அதில் உள்ள சில நன்மைகள் வேறுவிதமான மன நிறைவைத் தரும். அதில் ஒன்று இறைவனுடன் நாம் எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளும் நிலை. அதைக்குறித்து எண்ணியபோது எழுதியபாடல்:

51. இனிமை

தனிமை என்றதோர் இனிமை
என்தலைவன் தாள்பணிந்து
வணங்கும் போதெல்லாம்
அரவணைக்கும் ஓர் புதுமை
சொந்த பந்தம் நம்மைச்
சூழ்ந்து நின்ற போதும்
தேடி அவனடிப் பணியும்போது
நாடி வருகின்ற இன்பம்
சொல்லில் கூற முடியா
சுகமே அந்த நேரம்
சுவைத்து அறியா மூடர்
புரிந்திடாத பேரின்பம்!
26-06-1993. கோண்டா (உ.பி).

நாமாவளி என்பது இந்திய பக்தி வழிபாட்டின் ஒரு அங்கம். வட இந்தியா, தென் இந்தியா என எப்பகுதியிலும் இறைவனின் நாமம், புகழ், குணம் சொல்லி மக்களை ஆராதிக்க அழைப்பது வழிப்பாட்டின் ஒரு பகுதி. குறிப்பாக கதாகாலட்சேபங்கள் நடக்கும்போது, ஆரம்பிக்கும் முன் நாமாவளி கூறுவது மரபு. அதன் அடிப்படையில், வட இந்தியாவில் சத்-சங் நடத்தும்போது ஹிந்தியில் நான் கூறும் நாமாவளியைப்போல் தமிழிலும் கூறவேண்டி இதை, 08-07-1993-ல் பெங்களுரில் சில வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தபோது எழுதினேன்.

52. நாமாவளி

அழைப்பு: எல்லோருக்கும் இறைவனாம் முக்தேசனே போற்றி
பதில்: எமக்கும் தலைவனாம் இறைவனே போற்றி

அழைப்பு: தந்தையாம் இறைவனின் தாளடி போற்றி
பதில்: எந்தையாம் இறைவனின் இணையடி போற்றி

அழைப்பு: அரூபியாய் இளங்கிடும் ஆவியே போற்றி
பதில்: அருளினை அளித்திடும் அண்ணலே போற்றி

அழைப்பு: மூவரில் ஒன்றாய் இளங்குவோய்ப் போற்றி
பதில்: முதல்வனே இறைவனே போற்றி போற்றி


53. காணக் கண் போதுமோ?

காணக் கண் போதுமோ ஐயனே
கருணையினால் நீ எமக்கு படைத்தளித்த
இணையில்லா இயற்கையின் மாட்சியைக் காண--காணக் கண்.....

உயர்ந்த மலையின் உச்சியின் மீது
உலவி வருகின்ற அழகிய முகில்கள்
ஓடிவருகின்ற நதியின் அலைமீது
வருடி வருகின்ற குளிர்ந்த தென்றல்
பாடிச் செல்கின்ற பல இனப்பறவை
கோடிக்கணக்கான வண்ண மலர்கள்
இத்தனையும் அளித்தது போதாதென்று
உன்னையே நீயளிக்க வந்தனை அன்று
சத்திய வேதத்தின் சாட்சியும் உண்டு
சரித்திர நிகழ்ச்சியைக் கண்ணாரக் கண்டு
உன்னைப் பின்தொடர்ந்த சீடரும் உண்டு
உருகாத மனம் உண்டோ அன்பினைக் கண்டு--காணக் கண்.....
30-07-1993. கோண்டா (உ.பி).

பல சமயங்களில் நம் பிரார்த்தனை என்பது ஒருவிதமான சடங்காகப்போய்விடுகின்றது. ஓரேமாதிரியான வார்த்தைகள், முறைகள். பலமுறை நமது பிரார்த்தனை ஒருகடமைக்காக செய்யும் அர்த்தமற்ற சடங்காக ஆகிவிடுகின்றது. பிரார்த்தனை செய்யாவிட்டாலோ, குற்ற உணர்வு. ஆனால் வழக்கமான பிரார்த்தனையிலோ மனநிறைவு அற்ற தன்மை! மனதின் எண்ணங்களே ஏன் பிரார்த்தனையாக இருக்கக்கூடாது? வெறும் வார்த்தைகள் எதற்கு? 18-08-1993 (கோண்டா?) அன்று இரவு ௧௧-மணிக்கு படுக்கும்முன் வழக்கமாக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தபோது, உடனே இப்பாடலை பத்து நிமிடங்களுக்குள் ஒரு பிரார்த்தனையாக எழுதினேன்:

54. தஞ்சம்

உள்ளும் புறமும் எல்லாம் அறிந்த உனக்கு
உரைப்பதற்கென்று ஒன்று உண்டோ எனக்கு?
நன்றோ தீதோ இனி நானறியேன் நானிலத்தில்
ஒன்றறிவேன் அதுஉன் பாதமன்றி வேறு இல்லை
வெறும்வார்த்தைக் கூறி "ஜெபம்" என்ற பெயராலே
புலம்புவதால் என்னபயன் புனிதனே இனிமேலே?
என்னை அறிந்து கடையேனுக்கிறங்கி
கருணையினால் வந்து ஆட்கொள்வாய்
கதறிடும் என் ஆன்மாவில் குரலே ஜெபமாகும்
தோற்றேன் போராடத் தொடங்கிய நாள்முதலே
தோவியன்றி வெற்றியேதும் காணேன் வாழ்வினிலே
என்பெலன் நம்பி இறங்கியதால் யுத்தமதில்
இழந்தேனே என்னையதில் இனிசக்தி இல்லைஎன்னில்
நன்கறிந்த உனக்கினி நான்கூற ஒன்றுமில்லை
நாவும் எழவில்லை நான்புலம்ப உன்னிடத்தில்
ஐயனின் அருள்மூலம் வருகின்றேன் உன்னிடத்தில்
எனக்காய் உயிரளித்த என்நாதன் எனக்குண்டு
ஏற்றபடி பரிந்துரைக்க ஆவியின் அருளுண்டு
தந்தையென நீயுண்டு தாங்கிட உன்தயவுண்டு
"தஞ்சம், தஞ்சம்" என தாள்பணிந்தேன் ஜெபமாக

Saturday, September 17, 2011

27-07-1998-ல் மதுபனியில், அந்நேரம் சந்தித்த சில பிரச்சனைகளை மையமாக வைத்து எழுதிய பாடல்:

22. பரிவு காட்டு

நொந்து நொந்தே சமூகம் வந்தேனையா
நோக்கிப்பார் ஏழை என்னை நீயே
ஏதுசெய்வேன் வழி வேறேதும் இல்லை
முக்தேசனே நீயன்றி கதிவேறில்லை
புரிந்திட மறுத்தாராம் பேதை என்நிலை
புகலிடம் எனக்கினி மாந்தரிடம் இல்லை
போதும் ஐயோ இனிவேண்டாம் வீண்தொல்லை
புனிதனே நீயன்றோ ஆறுதலின் எல்லை
நம்பியே இனிநான் யாரிடம் கூறுவேன்
நான்கொண்ட மன பாரங்கள் யாவையும்
நண்பரோ அன்பரோ காணேன் இதுவரை
நாதனே உன்போல் என்நிலை புரிந்தோரை
யாதொரு குறையும் அவர்மீது நான்கூறேன்
யாவரும் என்போலே பாடுள்ள மனிதரே
ஆயினும் அவர்மூலம் நீகாட்டும் பரிவினை
அருளிடு அடியேனுக்கு மீண்டும் ஒருமுறை

சாத்தால் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தபோது, 11-04-1990 அன்று கதா உபனிஷத் படித்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக ஸ்லோகம் ௧.௨.௯-க்கு வியாக்யானத்தில் "Only an enlightened soul alone can enlighten other" என்ற வரிகள் என்மனதை ஆழமாகத் தொட்டன. உடனே இப்பாடலை, சங்கீதம் 119:105-ன் அடிப்படையில் எழுதினேன்:

23. எரிகின்ற தீபம்

எரிகின்ற தீபமே ஏற்றிடும் மறுதீபம்
என்பதே வாழ்க்கையில் உண்மையும் ஆனதால்
எவ்வளவு கற்றுமே என்னுளம் ஆவியால்
ஏற்றிய தீபமாய் ஒளிதனைப் பெற்றிடேல்
கற்ற என்கல்வியால் கண்டிலேன் பயனெதும்
கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய்
மதியிருந்தும் மூடனாய், மனதினில் ஏழையாய்
அகமதில் நீயன்றி ஐயனே வெறுமையாய்
வாழ்ந்திடும் வாழ்க்கையில் வளம்குன்றி வறியனாய்
புவிக்குப் பாரமாய், பொழுதெல்லாம் வீணுமாய்
கழிந்திடும் காலத்தில் கல்லறை ஏகியே
காரிருள் அடையுமுன் காத்திடும் முக்தேசனே
எரிகின்ற தீபமாய் இளங்கிடும் நின்வார்த்தையால்
இறங்கிடும் இவ்வேழைக்கு இவ்வுலக வாழ்க்கையில்
அருள்கொண்டு ஐய்யனே அண்டிடும் அடியனுக்கு
அருளிடும் நின்வார்த்தையே அணைந்திடா தீபமாய்.

சாத்தால் ஆஸ்ரமத்தில் பக்தியைக் குறித்து படித்து, பேசி, சிந்தித்த நாட்களில், 25-11-1990 அன்று எழுதிய பாடல். இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று:

24. பக்தர்க்குத் தஞ்சமே

தாயும் நீ தந்தை நீ
தலைவன் நீ தஞ்சம் நீ
ஆருயிர் நண்பன் நீ
அணைத்திடும் தமையன் நீ
நேசத்து மையம் நீ
நெஞ்சத்து உணர்வையெல்லாம்
பாசமாய்க் கொள்ளை கொள்ளும்
பதியும் நீ என்னுயிர்க்கே

நெக்குருகி உளம் கனிந்து
நெஞ்சம் தழை தழைக்க
பக்திப் பரவசமாய்
பண்ணெடுத்து பாடும்கால்
பரனே பரம்பொருளே
பராபரனே மெய்ச்சுடரே
பரமானந்த ஜோதியே
பக்தர்க்குத் தஞ்சமே

ஏதுமொழி நான்கண்டேன்
என் ஐயா உனைப்போற்ற
ஏங்கிடும் ஏழை என்
உள்ளத்து உணர்வுகளை
எப்பாங்கில் எடுத்துரைப்பேன்
என் உளம்நீ அறியாயோ?
என்றென்றும் இருக்கின்ற
இறையே என்தலைவா

ஆனந்தக் கண்ணீரால்
அகம்கழுவி மெய்மறந்து
காதல் வசப்பட்ட
காரிகையும் போலாகி
நேசர் முகம்தேடி
நித்தம் உனைநாடி
கையளித்தேன் என்னையுமே
காத்திடுவாய் பொற்பாதம் தஞ்சம்

உள்ளம் உனில் கரைய
உரோமம் சிலிர்த்தோங்க
கண்ணில் நீர்சொறிய
கரங்குவித்தே அடிபணிந்து
தஞ்சம் எனவந்தேன்
தாயேநின் சேய் நான்
தரணியில் காணேனே
திருவடியன்றி ஓர்புகலிடமே!

05-12-1990 அன்று சாத்தால் ஆஸ்ரமத்தில் துக்காராம் கவிதைகளை படித்துக் கொண்டிருந்தபோது, அவற்றின் கருத்தால் தூண்டப்பெற்று எழுதிய இரண்டு பாடல்கள்:

25. இறையறியா ஞானம்

பதரை உரலிலிட்டு
பலமுறை குத்தினாலும்
ஓர்மணி அரிசிதான்
உமக்கவை தந்திடுமோ?
எவ்வளவு காற்றாலும்
இறையறியா உன்ஞானம்
மணியற்ற சாவிதானே
மனதில்நீ கொண்டிடுவாய்.

26. கையளித்தேன்

கடந்த காலம் திரும்பிடாது
கருத்தில் கொண்டேன்
கடந்துபோகும் உலகத்தின்
வேஷம் கண்டேன்
கண்டகாட்சி கொண்டகோலம்
கடிதில் மறைய
கணப்பொழுதும் கையளிக்கேன்
மாயைக்கென்னை
எதிர்காலம் எப்படியோ
என்ற எண்ணம்
என்னுள்ளே என்றென்றும்
அலையாய் மோத
என்திறனை முற்றாக
சார்ந்தே நிற்க
இழந்தேனே இன்றுள்ள
அமைதி தன்னை
இறந்தகாலம் எதிர்காலம்
இரண்டையுமே
இன்றே கையளித்தேன்
இறைவன் பாதம்
இமைப்பொழுதில் என்னுள்ளம்
மகிழ்ந்து ஆங்கே
ஏற்றிப் புகழ்ந்தது
அவனின் நாமம்!

17-12-1990 அன்று சாத்தால் ஆஸ்ரமத்தில் மாலையில் உலவச் சென்றபோது, அதிகமாக இறைவன், அவனை எவ்விதத்திலும் அறியமுடியாத்தன்மை, எந்த மனித மொழியிலும் விவரிக்கமுடியாமை இவையே என் சிந்தையை வெகுவாக ஆட்கொண்டிருந்தது. அன்று என் நாட்குறிப்பில் இந்நாளின் அனுபவத்தை விபரமாக எழுதிய பிறகு, நடு இரவில் மீண்டுமாக அவற்றை சிந்தித்த போது எழுதிய பாடல். (பல சமயம் படுக்கையிலேயே, நோட்டு மற்றும் பேனா வைத்துக் கொள்வேன். கவிதை வரும்போது படுத்தபடியே, இருட்டில் நோட்டில் நன்றாக இடம் விட்டு எழுதுவேன்).


27. எப்படி எடுத்துறைப்பேன்

சிந்தைக்கு அடங்கோனை சொல்லினால் அறியோனை
எல்லைக்கு எட்டாது எங்கும் நிறைந்தோனை-தொல்லோனை
ஏதுமொழி கொண்டு எடுத்துரைப்பேன்--என்னை அவன்
அறிவான், அறிவேன் நானும் அவனை அவ்வண்ணமே
காலத்திற்கடங்கோனை கருத்திற்கு எட்டோனை
ஞாலத்தின் ஞானத்தால் நவின்ற இயலோனை--ஏதுமொழி கொண்டு....

ஆண் அல்ல பெண் அல்ல அருவல்ல உருவல்ல
அவனியும் அவனல்ல அவனிக்குப் புறம்பல்ல--ஏதுமொழி கொண்டு....

நானே அவனாகி நாதமும் கீதமும்போல்
ஒன்றியபின் உண்டோ ஒருபேதமுமே--ஏதுமொழி கொண்டு....


09-01-1991. இந் நாட்களின் என் மனநிலை முழுவதையும் இங்கு கூற முடியாது. ஆயினும் “உற்றாரை யான் வேண்டேன்” என்ற மாணிக்கவாசகரின் பாடலையும், “ஊரிலேன் காணி இல்லை” என்ற தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் பாசுரத்தையும் என் நாட்குறிப்பில் எழுதிய பிறகு இப்பாடலை எழுதினேன்:

28. நீயன்றி யாருளார்?

உண்டோ ஓர் உறவு உலகினிலே
உன்னையல்லால் இனி வாழ்வினிலே
நன்றே காணேன் நானிலத்தே
நாதா நின்திருவடித் தஞ்சமன்றி
ஈன்றெடுத்த தாய்தான் என்ன?
பேணிவளர்த்த தந்தையும் என்ன?
சேர்ந்து வளர்ந்த சோதரர் என்ன?
தாங்கி அணைத்த சுற்றமே என்ன?
நாடிக்குலாவிய நண்பர்கள் என்ன?
நானிலத்தோர் நாளுமே நாடும்
மனைவி மக்கள் மாண்புமே என்ன?
ஏது ஒன்றும் காணேன் ஏழை
ஏங்கிடும் உள்ளத்து உணர்வினுக்கு
உற்ற ஓர் உறவாய் உலகினில்
உன் உறவு ஒன்றே பெரிதாய்
இலங்கியபின் இகத்தில் இன்னும்
பற்று ஏதும் காணேன் நானும்
பரமனே நின் பாதம் தஞ்சம்.


ஒருவிதமான மனப் போராட்டம் நிலவிய கடுமையான நாட்கள். மிகவும் "தனிமையை" உணர்ந்த நாட்கள். அதேசமயம் தனிமையை அதிகம் விரும்பிய நாட்கள். இப்பிண்ணனியில் சாத்தால் ஆஸ்ரமத்தில் "பன்னா" ஏரிக்கரையில் சென்று அமர்ந்து இறைவனோடு பேச ஆரம்பித்தபோது, மன உணர்வுகளைக் கொட்டி 18-04-1991-அன்று எழுதிய பாடல்:

29. அநாதையல்ல

தாயற்ற குழவியாய் ஆனேனோ?
தரணியில் கதியற்றுப் போனேனோ?
நோயுற்ற மனதுடனே நொந்து நொந்து
நோக்கினேன் திருவடியைச் சோர்ந்து சோர்ந்து
காயமே பட்ட திருக் கரத்தை நீட்டி
கதறிடும் ஏழையை அணைத்திடாயோ?
காரணம் வேறேதும் காட்டிடாதே
கணப்பொழுதும் இனியும் நீ தாமதியாதே!
பிணியாளிக்கல்லோ வைதியன் தேவை
பேதைக்கல்லோ உன் ஞானம் தேவை!
அறிந்தபின் இன்னும் தாமதமேனோ?
அறியாதவன் போல் வீண் தயக்கமும் ஏனோ?
நானிலத்தோர் என்மீது பழியும் கூறார்
நன்கறிவார் நான் உன் அடிமை என்று
இனிவேறு புகலிடம் எனக்கிங்கில்லை
முக்தேசனே உன்னருளன்றி வழியும் இல்லை
சோதனைக் கனுமதித்த காலம் போதும்
சோர்ந்திங்கு நிற்கும் என்கோலம் காணும்
ஏங்கிடும் ஏழைமீது இறங்கிடாயோ?
என் ஐயனே கதறலைக் கேட்டிடாயோ?
அறிந்தே செய்த பிழை அனேகம் உண்டு
அலைந்திடும் மனதின் வேகம் கொண்டு
செய்த பிழையாவையும் மன்னிப்பாயே
சேயேனை அருள்கொண்டு சேர்த்திடுவாயே
ஊறறிய உத்தமன்போல் நடித்திட்டாலும்
உள்ளான வாழ்க்கையிலோ உண்மை இல்லை
காரணமோ வேறேதும் இல்லை இல்லை
கள்ளமனம் அளித்திடுதே தொல்லை தொல்லை
பாவத்தின் கீழாக விற்றுப் போட்ட
பாழ்மனதை மீட்டெடுத்து வெற்றி நாட்ட
பாதகனுக் கிறங்கியே சிலுவை மீது
பலியான அன்பிற்கோ எல்லை ஏது?
பழிவேறு யார்மீதும் கூறேன் நானும்
பலமுறை தவறினேன் தெறிந்தேதானும்
பறிகாரம் உண்டோ வேறெங்கேனும்?
பரனே உன்னருளன்றி வழியே காணும்
நீரற்ற மேகம்போல் நிலையற்றுப் போனேனே!
நிலையற்ற கடலின் அலைபோல ஆனேனே!
திசைகெட்டுத் திரியும் தாரகை போலது
தறிகெட்டுப் போனது தீயனின் வாழ்விது!
கருமியின் கை செல்வம் நான்
காட்டினில் வீணே காய்ந்த நிலா
கடல்மீது பெய்த மழையே தான்
கனிகாணா பட்ட மரம் ஆனேன்
பாழ் நிலமதுவோ பலமுறை நீர்குடித்தும்
பயனேதும் தாராது பயிரொன்றும் முளைக்காது
முள்ளும் பூண்டுமே முளைப்பிக்கும் பூமிநான்
தீயிட்டு நிலம்திருத்த திருவே நீ வாராயோ?
மீண்டும் ஒருமுறையே மீளாத பாவத்தால்
கோரச் சிலுமையிலே கோவே உனையேற்றி
வதைத்திடும் வஞ்சகனை வள்ளளே தள்ளிடாதே
வந்தேன் நின்னடியே வற்றாத கருணையூற்றே
தாய் மறப்பாள் சேயைத் தானும்
தன் சுகமே நாடும் போது
மறப்பதில்லை நீயோ என்றும்
மகவு என்னை இமைப் பொழுதும்
"அன்னைநீ தந்தைநீ ஆருயிர்த் தலைவன்நீ
ஆதலால் இனியும்கூறேன் யாருமற்ற குழவி யென்று!!

20-11-1991 அன்று காட்மாண்டில் முழுநாள் உபவாசித்து, மெளன விரதம் இருந்து பிரார்த்தனை செய்தபோது, மனதில் பலவித எண்ணங்கள், தாக்குதல், போராட்டங்கள் உண்டாயின. என் வாழ்வில் (ஏன் பலரது வாவிலும்) இது பலமுறை ஏற்பட்ட அனுபவம். என்று பூரணமாக உபவாசித்து மெளனவிரதம் இருக்கின்றேனோ, அன்றுதான் சிந்தையில் பலவித போராட்டம் ஏற்படும். எனவே இன்றும் அத்தகைய தாக்குதல் ஏற்பட்டபோது முக்தேசனை சரணடைந்து எழுதிய பாடல்:

30. அளித்திடு வல்லமை

பெரிதே எனது பலவீனம்
புரிந்தே வந்தேன் இந்நேரம்
அறிந்த உனக்கிதை எடுத்துரைக்க
அவசியம் ஏதும் காண்கிலேன் நான்
இம்மியளவும் இடம் கொடுத்தால்
எய்கிறான் அவனோ தீகக்ணையை
எதிர்த்து நிற்கவோ ஆற்றல் இல்லை
அதனால் அண்டினேன் உன்னடியை
பலமுறை தவறி விழுந்தவன்தான்
பகரேன் பழியை யார்மீதும்
தெரிந்தே செய்தவை அத்தனையும்
திருவே அறிந்தும் தாமதம் ஏன்?
எடுத்த தீர்மானம் எத்தனையோ
எண்ணினால் கணக்கில் அடங்கிடாது
தோற்றேன் வாழ்வில் நாள்தோறும்
தேவனே கடைக்கண் அருள்தாரும்
பலவீனம் இல்லா மாந்தருமே
பாரினில் எங்கும் வாழ்ந்ததில்லை
ஆதலால் ஏற்கேன் அவருரையை
ஐயனே அண்டினேன் திருவடியை
என்நிலை நன்கு புரிந்தவன் நீ
அந்நிலை அறிந்து வாழ்ந்ததினால் (எபிரேயர். 2:18)
ஆதலால் அளித்திடு வல்லமை
அவனுடன் நாளும் போர்புரிய!
Learn to Live with the Reality

“The Christians have a Pope, the Muslims the word of the Quran, communists have the Das Kapital,” says Francois Gautier, who continues, “Hindus are totally disunited. [Hindus] are busy making money and aping the western way of life.” [The New Indian Express, June 17, 2010. Chennai, p. 9] Comments like this bring about more calls for the ‘unity of Hindus’ as an ‘organized’ religion by comparing Hinduism with other religions like Christianity and Islam.

Such religious unity is impossible considering the pluralistic worldview of Hindus in every aspect of life—particularly in regards to religious faith. However, it must also be noted that the way we Hindus often think that Christians and Muslims (including Communists or any other ideological group) have unity is not accurate. The bloodshed between Sunnis and Shias among Muslims (we need not mention the way Ahamedias and other minority sects in Islam are treated by other Muslims) is a known fact. In the same way, the Pope is not accepted by all the Christians, even by many Reformed Catholics. In fact, among Protestants there are more than 40,000 denominations that could rightly be called ‘sampradayas’, as we have in Hinduism. However, it is worse than the sampradayas in Hinduism. Recently, one Christian, not agreeing (or accepting) the ‘missiology’ (mission theology) of a few evangelicals to reach people groups based on caste, decided to take the matter to the Church at large since he was not being listened to. Before he could appeal to the so-called ‘Church at large’, other Christians began to oppose his views. The view of Christian and Muslim unity based on ‘One God, One Scripture, One Pope’ is a myth; calling for unity among Hindus when compared with these other faiths is foolishness.

Instead of asking for impossible ideals, let us learn to live with the reality. In fact, a fundamental strength of Hinduism is its pluralism! Most Hindu religious fundamentalism came because of the effort to impose ‘uniformity’ in the name of unity. Thank God that in spite of a small section of Hindu fundamentalism, Hinduism both as a religion and as a civilization did not succumb to fundamentalist ways. This strength of Hinduism should be promoted rather than giving a call for a ‘Supreme Hindu Council’ to issue a number of adesh, which would be binding to 800 million Hindus in India and a billion worldwide.


Dayanand Bharati, Gurukulam, June 19, 2010

After pointing out the way Hindu Gurus like Nityananda, Shankaracharya and finally Sri Sri Ravi Shankar were maligned by media and there is a witch-hunt against Hindu gurus, Francols Gautler writes:

Finally, Westernisation through television and advertisements, is sweeping across India, and this may be the greatest danger, as westernization has killed the souls of many Asian countries. The Christians have a Pope, the Muslims the word of the Quran, communists have Das Kapital of Karl Marx. But Hindus are totally disunited.
Hindus are busy at the moment making as much money as possible and aping the western way of life, not even bothering to teach their children Hindu values and culture, whereas every Muslim child is told about the Quran. Hindu groups in the US or the UK, are constantly fighting each other and thus have very little lobbying power….It is said that even the Hindu deities and goddesses are jealous of each other. It is thus of vital importance that Hindu gurus and swamis regroup under one umbrella which could be called the ‘Supreme Hindu Council’. Each group and guru will retain its leadership and autonomy but will meet three times a year and issues a number of adesh, which will e binding to 800 million Hindus in India and a billion worldwide.
There are too many gurus and swamis all over India and the world and it would not be possible to assemble them all in one group. Thus I propose that the 12 gurus in India who have the most disciples, represent all the other swamis and gurus. Amongst them, of course, we should find Satya Sai Baba, Sri Sri Ravi Shankar, Amrita Anandmayi, the Shankaracharya of Kancheepuram, Guruma of Ganeshpuri, Shri Ramdev, Satguru Jaggi, etc. The leadership of this group will be rotated every year and so can membership for that matter, as there are quite a few other gurus of India who have a huge following.
It is not only Hinduism which is at stake, but the ‘Knowledge Infinite’ which came down, through the ages and has survived today only in India in a partial form. This knowledge only can save the world. Let Hindus understand that not only do they have the numbers, but also that they are one of the most successful, law abiding and powerful communities in the world. Nobody should denigrate their gurus.


Semitic constraints will hamper Hinduism. Govind Krishna (govind@expressbuzz.com.
The New Indian Express, July 2, 2010. Chennai, p. 9
A religion cannot hope to survive on a policy of cultural protectionism, if it does so it will become a creed.

In ‘Let All Hindus come together’ (TNIE, June 17), Francois Gautier proposes that a council of Hindu leaders should assume spiritual authority over all Hindus a la the Supreme Council of Iran. The stakes have to be quite high for such an upside down Lutheran Reformation; and they are: ‘It is not only Hinduism that is at stake, but the ‘knowledge infinite’, ‘ he writes.

What Gautier fails to realize is that it is only the ‘knowledge infinite’ that is at stake. Hinduism matters only so far as it is a suitable vehicle for expressing it. And the surest way to ensure that as a religion, Hinduism loses its ability to channel the universal spirit is to hand it over to the dictates of a set of self-appointed godmen; some of dubious credentials and none of any real stature.

As a Hindu, I find offensive the very suggestion that any man, god-realised or not, can issue adesh that would control the way I or any of the one billion Hindus practice their religion. The very thought is a blasphemy (and the only one that Hinduism would label so), that strikes at the very heart of the Sanathana Dharma-the liberty of each individual sadhaka to find his path to the Absolute. How dare anyone tell me how to face my god? How to love him, how to act for him!

The steps that Gautier suggests are incalculably insidious to Hinduism’s foundations. The establishment of any kind of spiritual authority threatens the very identity of Hinduism as a religion without an organized church. Unlike the Semitic religions, starting from the Vedic ages, spiritual truth in India was founded on the mystic’s perception rather than the edicts of priests. It has been Hinduism’s strength, not its weakness.

This is something which Swami Vivekananda emphasized: “If you want to be religious, enter not the gate of any organized religions. They do a hundred time more evil than good, because they stop the growth of each one’s individual development…. Religion is only between you and your god, and no third person must come between you”. (Complete Works, Volume I).

If spirituality has declined in India it is not because of youngsters aping Western lifestyle or Indians discovering the wonders of cable TV; if the life force of Indian spirituality rested on such fragile foundations, it would have died out long ago. A religion cannot hope to survive on a policy of cultural protectionism, if it does so it will become a creed.

Swami Vivekananda once recounted the incident of a protestant missionary preaching hell fire in an Indian village. As the preacher continued to hurl vitriolic abuse at their gods and beliefs, the villagers listened quietly and curiously, asked some questions and then went back to their homes calmly. The frustrated missionary was heard remarking that if the people had such faith that they could listen to their religion being criticized, India could not be converted in a thousand years.

If Christian proselytizing is making inroads into the country’s poor as it could not even when India was lying prostrate under British imperialism, we should seek the reasons for its inside Hinduism itself.

After the second half of the Nineteenth Century, led by Sri Ramakrishna Paramahamsa and follwed by titans like Vivekananda, Ramana Maharshi, Sri Narayana Guru, Swami Sivananda and others, Hinduism witnessed a spiritual Renaissance comparable in importance only to the Bhakti movement and the advent of Sankara.

Advaitic in tenor and rigorously rational in its language, Neo-Vedanta was both India’s response to the naturalist philosophy of the West and an attempt to set its own house in order by extricating Hinduism from the mire of Brahminism, ritualism, oddball fakirism and miracle-mongering it had got stuck in. It was also in many ways, an evolution; the next step in Hinduism’s dynamic growth as a religion.

From those exalted heights, from a Vivekananda who burst upon the spiritual consciousness of the world proclaiming that “Krishna, the Christ and Buddha are but waves on the infinite ocean that I am”-we now have avatars who conjure knick-knacks out of air and deign to give their adoring devotees darshan.

If the spiritual ideal of the nation was once the half naked ascetic, today’s spiritual discourse has degenerated into mass hysteria over godmen and new age gurus, whose contribution to the corpus of Hindu thought is about zero, but to PR management is significant.

No wonder that entry to Gautier’s supreme council is based on popularity, not spiritual knowledge. And the media, for from hounding them as he alleges, has happily licked up every last morsel of viewership they promise, thus helping in creating the phenomenon of the ‘celebrity guru’.

For instance, Nithyananda claimed to be a paramhamsa till he was caught on video romping with a Tamil actress. Gautier is right to say that Nityhyananda was persecuted for having consensual sex, but the culprits were not Sonia Gandhi-backed Christians or migrant Muslim Gulf workers, but a Hindu public baying for the blood of their fallen idol and a shamelessly complicit BJP government.

For months, Karnataka witnessed the farcicial spectacle of the state executive trying to assuage public wrath by cooking up any number of cases against poor Nithyananda; from trntric sex rituals to illegal possession of kerosene.

Interestingly, none of Gautier’s supreme council of Hindu leaders spoke up against the injustice to their comrade.

But Nithyananda received a surprise visitor the day after his relese. Pramod Mutalik, who has been rendering yeoman service to Indian culture and Hinduism by organizing assaults on defenceless girls and by hiring out riots, gave the finishing touch to this drama of the absured by crowning Nithyananda a second Vivekananda.